"மகள் பிறந்தாள்"

அன்புமனைவியின் ஆவென்ற அலறல் சத்தம்
மனதைக்கிழிக்கும் படபடப்பு நேரம்
குவாகுவாவென பிஞ்சுக்குரல் நெஞ்சம்தொட
ஓடொடிவந்தேன் உன்னருகில்
சிறு கைகால் உதைத்து நீ
முதன்முதல் அழுவதைப் பார்த்தேன்
மனம் முழுதும் பரவச பேரானந்தம்..!!
போதுமடி கண்ணே! இது போதும்...
என் இந்த பிறவிப் பயன் கண்டேனடி..!!

எழுதியவர் : எழுத்து சூறாவளி (6-Apr-12, 11:02 pm)
சேர்த்தது : சீர்காழி சபாபதி
பார்வை : 264

மேலே