இளமை ஒரு புதிய கவிதை

இளமை ஒரு புதிய கவிதை - அதில்
இனிமை என்பது எழுத்தின் கோர்வை...

வரிகள் என்பதில் வலிகள் இல்லை
வசந்தம் ஒன்றே வாழ்வின் எல்லை

சிரிக்க தவறிய நொடிகள் இல்லை - கவலை
சேமித்து வைக்க இதயம் இல்லை

எழுதியவர் : (6-Apr-12, 11:42 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 333

மேலே