புதிய மருந்துகள்...!

கணவன் அடித்துவிட்டான்
என்று கலங்கி போயிருந்த
மனைவி..!
மறுநிமிடமே எடுத்தால்
மண்ணெைண்ணெெய் என்னும் மருந்தை..!

புரியாத பெற்றோர்களால்
புறங்கணிிக்கப்பட்ட காதல்
ஜோடிகள்..!
புரிந்தே எடுத்தார்கள்
பூச்சிக்கொல்லி என்னும் மருந்தை..!

அன்பான குடும்பத்தில்
கசப்பான கடனால்
கவலையில் விழுந்து
அவர்கள்..!
காசுக்கு வாங்கினார்கள்
தூக்கமாத்திரை என்னும் மருந்தை..!

ஆறு நாளாக
அவதிப்பட்ட வயிற்றுவலியால்
அவள்..!
வலி தாங்காமல் அரைத்தாள்
அரளி விதை என்னும் மருந்தை..!

எழுதியவர் : இளையகவி இர. இரவி (18-Sep-10, 10:11 am)
சேர்த்தது : R.Ravi
பார்வை : 521

மேலே