இது ஒரு கிறுக்குத்தனமா?
குழந்தைகளே!
பிறந்தவுடன் உங்கள்
கைரேகையைப் பதியுங்கள்!
அப்போதுதான் நீங்கள்
கானாமல்போனால்
கண்டுபிடிக்க முடியும்
உங்கள் ரேகைகளை வைத்து
உங்கள் எதிகாலத்தை அறியமுடியும் .
அதிஷ்டமிருந்தால்
பள்ளிக்கூடம் போகாமலே
பொறியாளராகவோ? நீதிபதிகளாகவோ?
மருத்துவராகவோ? மாறிவிடலாம்.
இல்லையென்றால்
ஆடு மாடுதான் மேய்க்கவேண்டும்.
இப்படியே எல்லோரும்
கைரேகையை பதிந்துகொண்டால்
களவு இருக்காது
கைகலப்பு இருக்காது
காவலர்களுக்கு வேலையிருக்காது.
வாடகைக்கு இருப்போர்கள்
ஆளுமை குறிப்பு(BIODATA)களை
பதிந்து கொள்வதால்
முகமூடி கொள்ளையர்களை
பிடிக்க முடியும்போது
இது சாத்தியமில்லையா?