என் இனிய மழையே
![](https://eluthu.com/images/loading.gif)
இசை தெரியாத
என்னை கூட
இதழ் அசைக்க
வைக்கிறது உன் நாதம் !
உயிருக்குள் சென்று
சிலிர்க்க வைக்கிறது
உன் தீண்டல் !
என்னை எங்கோ
அழைத்துச் செல்கிறது
உன் வருகையின் போது
வரும் வாசம் !
என்னுள் எரியும்
கோபத்தீயை கூட
அணைத்து விடும்
உன் அணைப்பு !
இனி எப்போது வரபோகிறாய்
என் இனிய மழையே?
- மழைக்காதலன்