அதோ வருகிறாள்

காதல் சொன்ன
நேரத்தில்
மௌனமாக
தடைபட்டு
கிடந்த - அவள்
உதடுகள்
வெதும்பிருந்தன....
கை அசைத்த
நேரத்தில்
வலிக்குமோ ?
என்று நினைத்த - அவள்
கைகளில் ரோஜா
பூத்திருந்தன....
மெல்ல நடை
நடந்து வரும்
என்னவள் !
மெட்ரோ ரயிலாகி
விரைந்து வந்தாள்....
கிறுக்கிய கவிதை
மடல்களை
கிழித்தெறிந்தவள் !
இன்று,
கவிதையாகவே
வருகிறாள்....
எப்போதும்,
நான் அழ - அவள்
மௌனம் !
இன்று மட்டும்
நான் மௌனம் - அவள்
அழுகிறாள்....
என் கல்லறையில் ....
ஆத்மா பேச
நினைத்தும்
பேச முடியவில்லை
என்னால்...
அழுவதை நினைத்து
அலைந்து கொண்டிருக்கிறேன்
கற்றோடு கலந்துருக்கிறேன்...!

எழுதியவர் : கிருஷ்.ரவி (22-Apr-12, 9:24 am)
சேர்த்தது : கிருஷ் ரவி
பார்வை : 272

மேலே