அவஸ்தை
உன்னிடம் காதல் சொல்லிவிட்டு
காத்திருக்கிறேன்.
அறுவை சிகிச்சை அறைக்குள்
நுழையும்
நோயாளியைப்போல
உயிர் பிழைக்கும்
உத்திரவாதமற்ற
பொழுதுகளின்
ஆக்கிரமிப்பில்
அவஸ்தையடைகிறது
மனசு...
--- தமிழ்தாசன்---

