நட்பிற்கும் உண்டோ அடைகுந்தாழ் !!

கடனாளி ஆகின்றேன் அதைவாங்க
என்றும் பின்வருவா யென்றால்,

மரணத்தை ஏற்கின்றேன் மறுஜென்மம்
முழுதும் உன்னுடனே யென்றால்,

வீண்பழிகள் போடுகிறேன் பழிதீர்க்க
எந்தன் பின்தொடர்வா யென்றால்,

எதிர்பார்ப்பு பிரியப் பார்க்கிறேன் என்றும்
போலவே எதிராய்செய்வா யென்றால்,

அகங்காரம் பிடித்தவனா கின்றேன்அதை
அடக்க நீயேவருவா யென்றால்,

எந்தன் நட்பிற்கு எதிரிகளான அத்தனையும்
ஏதோவொரு வழியில் நண்பனா யிருக்க
நட்பிற்கும் உண்டோ அடைகுந்தாழ் !!

எழுதியவர் : எம்.ஆர்.கார்த்திக் (16-May-12, 10:36 pm)
பார்வை : 480

மேலே