நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்

நினைவுக்கும் பெரும் வலிமை
உண்டு/
நடத்தி முடியதனை செயலாகக்
கொண்டு/

கற்பனையில் எத்தனையோ
நித்தமும் தோன்றும்/
அத்தனையும் வெற்றிக்
கனி கொடுப்பதில்லை/

முயற்சியும் வீழ்ச்சி
காண்பதுண்டு/
வீழ்ந்தவன் எழுந்து
வெல்வதும் உண்டு/

சக்திக்கு மீறிய
ஆசைகளை வளர்ப்பதும்/
நிறைவேற்ற முடியாமல்
நின்று தவிப்பதும்/

மானிடப் பிறவியின்
கொள்கையில் ஒன்று/
நினைவுகள் நிகழ்வுகளானால் இறைவனை மறந்திடுவோம் அன்று/

எழுதியவர் : ஆர் எஸ் கலா (22-Jun-24, 1:45 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 90

மேலே