மதுரை ஆதீனம் என்:1/293

ஏழாம் நூற்றாண்டில்
சோழவள நாட்டில்
சீகாழிப்பதியில் அவதரித்தார்
சிவபாத இருதயர் –பகவதியார்
தம்பதியினருக்கு மகனாக
ஆளுடைய பிள்ளையார்

தனது மூன்று வயதில்
நீராட மூழ்கிய தந்தையை
காணாது அம்மே..அப்பே என்று
அலறினார் குளக்கரையிலிருந்து
அதைக்கேட்ட சிவனும் பார்வதியும்
தோன்றி பசியென நினைத்து
ஞானப்பால் ஊட்டி மறைந்தனர்
உதட்டில் வடிந்த பாலைக்கேட்டு
அடிக்கவந்த தந்தையரிடம்
‘தோடுடைய செவியன்’ பாடினார்
திருஞானசம்பந்தர் ஆனார்
தலயாத்திரைகள் பயணித்தார்

அக்காலத்தில் பாண்டிநாடு
அரசன் கூன்பாண்டியன்
ஆதரவினால்
சமண் சமய இருளில்
சிவாலயங்கள் மூழ்கியதால்
மன்னனின் மாதேவியார்
மங்கையர்க் கரசி வேண்டுதலில்
மதுரை வந்தடைந்தார்

அன்றும் எதிர்த்த சமணர்களுடன்
மன்னரும் சேர்ந்து
அவர் தங்கிய
மடத்துக்கு தீ வைத்ததால்
மன்னருக்கு வந்த
வெப்பு நோய் தீர்த்தார்
திருப்பதிகம் எழுதி
சமணத்தை அழித்தார்
சமணர்கள் கழுவேறினர்

மதுரை ஆதினமடத்தின்
முதல் ஆதினத்தின்
வரலாறு இதுவே!

(குறிப்பு:இது யாரையும்
பயங்காட்டுவதர்க்கு
எழுதியது அல்ல.)

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (24-May-12, 5:13 pm)
பார்வை : 146

மேலே