உன் பிரிவெனும் கொடிய வலி,,,,,,,

உன் பிரிவெனும் கொடிய வலி,,,,,,,

நீல வானமும்
நீ இல்லா வனமும்
நரகத்தைவிட மோசமான
உலகம் என்று உணர்கிறேன்
நீ அருகில் இல்லாத ஒவ்வொரு
நிமிடங்களும் ,,,

கடந்த கால வாழ்க்கையில்
நடந்த சில கசப்பான
அனுபவமாக நினைத்து
மறக்க முயல்கிறேன்
முயர்ச்சித்தும் தோற்கிறேன்
அப்போதும் இப்போதும் ,,,

உன்னிடம் தோற்ற நாளில் இருந்து
ஒவ்வொரு நாளும்
கண்ணீரில் மூழ்கி
கவலைகளை சுமந்து
இருட்டுக்குள்ளேயே வாழ்ந்து
பாலாகி போகிறேன்
உன்னை காதலித்ததால்
வீணாகி போய்கொண்டிருக்கிறேன் ,,,

முதல் கவிதையாக்கிய உன்னை
கசக்கி எரிய முயல்கிறேன்
முயன்றும் தோற்கிறேன்

உன்னை தூக்கி எரிய மனமின்றி
இதயத்திலேயே படித்து படித்து கிழிக்கிறேன்
என் ஒவ்வொரு நரம்புகளையும்
அறுத்து அறுத்து
உன் நினைவெனும் கொடிய
வலியால் துடிக்கிறேன் ,,,

உன்னால் காயப்பட்ட
என்னை நானே தேற்றி கொள்கிறேன்
என் கண்ணீர் துளிகள் எங்கும்
வலியும் வேதனையுமாக
நொடிக்கு ஒருமுறை
மரணம் என் பக்கம் வந்து செல்கிறது
ஐயோ அந்த மரணமும்
உன்னை போலவே ஏமாற்றி செல்கிறது
என்னை ,,,

உன் நிழல் தேடி
அலைந்து அலைந்து
உன்னை காணமுடியாமல்
மது அருந்தி வீடு திரும்பி
என்னை நானே அழிகிறேன் ,,,

சிகரெட்டில் உன் நினைவுகளை
புகைத்து புகைத்து
அதன் நெருப்பால்
என்னை சுட்டு சுட்டு
உன்னில் கரைந்த நிமிடங்களை
என் உடலோடு கரைக்கிறேன் ,,,

உன் பின்னே சுற்றியபோது
முற்க்கள் குத்திய வலி தெரியவில்லை
ஆனால் இன்று வலிக்கிறதடி
உன் பிரிவெனும் கொடிய வலி ,,,

என்னை கொன்று விடு
முடியவில்லை என்னால்
என்னோடு கலந்த
உன் நினைவுகள்
நாளுக்கு நாள் விசமாக மாறியும்
என்னை கொள்ளாமல்
வலி உண்டாகிகொண்டிருக்கிறது ,,,

மற்றவர்களிடம்
சகஜமாக பழக முடியவில்லை
பழக முயன்றும் தடுக்கிறது
உன் பிரிவெனும் கொடிய வலி ,,,

தாடியோடு புதைந்து போன
கலை இழந்த முகம்
உன்னை நினைத்தே
ஒடுங்கி போன என் தேகம்
நரைத்து போன தலைமுடி
இனி என்னை யாருக்கு பிடிக்கும் ,,,

உன்னை நினைத்தே
மரணிக்க தயாராகிறேன்
மரணம் என் வாசல் தேடி வரும் வரையும்
உன் பிரிவெனும் கொடிய வலிகளோடு ,,,

இப்படிக்கு,,,,உன்னவன்

எழுதியவர் : நந்திசெல்வா (26-May-12, 9:49 am)
பார்வை : 367

மேலே