புதுமைக் குயில் பறந்தது

பாரதி தாசன் பாட்டு
இனிமையும்,வேகமும்
எழுச்சியும் மிகுந்தது.

பாவேந்தர் பாரதி ஏற்றித் தந்த
தீபம் இந்த தாசன்.

20 [௨௦ ]ஆம் நுற்றாண்டின்
இவருக்கு இணையான
தமிழ்க் கவிஞர் எவர் உளரோ!

இவர் மறைவு நம்
தமிழ் மொழிக்கு நஷ்டம் .
தமிழ் மக்களுக்கு நஷ்டம்
தமிழ் கவிதைக்கு
ஈடு செய்ய முடியாத நஷ்டம்
கூற்றுவன் வந்தான்
பாரதியின் வாழ்க்கை வரலாறு
படைப்பதற்குள் அழைத்துச்
சென்றுவிட்டான்
பாரதி தாசனை!

எட்டுத் திக்கும் பேசப்படும்
இவர் புகழ்.!
இன்று பல கவிஞர்களை
வாழ வைக்கின்றது
இவரது கவிதைகள் !
இல்லை இல்லை
வாழ்ந்து கொண்டிருக்கிறது
நம் வாழ்க்கையில் !

எழுதியவர் : செயா ரெத்தினம் (3-Jun-12, 5:09 am)
பார்வை : 317

மேலே