உன்னைக் கொடு

உயிருள்ளவரை மறக்க மாட்டேன் உன்னை,
என் உள்ளத்தில் துளைப் போட்டவள் உன்னை,
மறந்தால் இருக்க மாட்டேன்,
உன்னை மறந்த இம்மனதுடன்,
உன்னை நான் இழக்க மாட்டேன் உயிரை மெய் பிரியும் வரை,
கருவில் உருவான குழந்தையைப் போல ,
என் கருவில் உருவான கருவாய் காதல்,
உயிரையும் மீறிய உரிமையாய் காதல்,
தவமிருந்து வளரும் தாமரையைப் போல உன்னைப் பார்த்து
எத்தனை யுகமானாலும் மலரும் என் மரபணுக்கள்,
பனித்துளி பகலவனிடம் தன் காதலை சொல்ல, செல்வதைப்போல
உன்னிடம் காதல் சொல்ல வருவேன் என்னை இழந்து,
பறவையை கண்ட அடுத்த நொடியில் மாறும் வேடனின் கூர்ப்
பார்வையைப் போல,
உன்னை கண்ட அடுத்த நொடியில் என் பார்வையாகும்,
ஆளில்லாத் தீவைப் போல் இருந்த இதயத்தில் ஆளும் அரசியாய் வந்து
அமர்ந்தாயடி,

எழுதியவர் : த.பொன்மாரியப்பன் (4-Jun-12, 11:41 pm)
Tanglish : unnaik kodu
பார்வை : 196

மேலே