பசி

கொல்லையிலே பசு ஒன்று
கன்றதனின் பசி அறிந்து
மடி நிறைய பால் தேக்கி
காம்புகளை விரைத்து நீட்டி

வந்துகுடி என்று கூற
சென்ற வார கன்றதுவும்
துள்ளி ஓடி வந்துநின்று
முட்டி மோதி பால்குடிக்க

வந்து பார்த்த எஜமானன்
பாய்ந்து கன்றை விலக்கிவிட்டு
பால் முழுதும் கறந்துவிட்டார்
நீர் கலந்து ஊரில் விற்றார்!

வாங்கியவர் இல்லமதில்
வாய்நிறைய பால்குடித்து
பசிமறைந்த குழந்தைகள்
கண்மூடின உறக்கத்தில்!

தாய் மடியின் பால்முழுதும்
தானே குடித்துவிட
உரிமையுள்ள கன்றதுவோ
வீழ்ந்தது பசி மயக்கத்தில்!

எழுதியவர் : subapriyan (20-Jun-12, 10:57 am)
சேர்த்தது : subapriyan
Tanglish : pasi
பார்வை : 182

மேலே