நீ என் உயிர்

பத்திரிகையற்ற
திபேத்போல ஒவ்வொரு
தடவையும்
உன் பார்வைகளால்
தாக்கப்படுகிறேன்.......
அப்போதெல்லாம் என்
நண்பர்களுக்கு
தணிக்கை
செய்தியும் வருவதில்லை
ஆனாலும்
கனவிலும் கண்ணகலங்கச்செய்கிறாய்
அப்போதும்
யாருக்கும் தெரிவதில்லை.....
- ஜே. எஸ். ராஜ்-