தாய்..!!

தாய்க்கு
இல்லையென்பவன்
தனயனும் இல்லை
அதை உணராதவன்
மனிதனும் இல்லை

மனதிலே இல்லை
பந்தங்கள் யாரென்று
இப்டி வாழ்வதுதான்
பெருமை வாழ்க்கையோ

பேசினாலும் துடிக்கும்
உறவுகள் இருந்தும்
தீண்டா சாதியாய்
இருப்பதுதான் கௌரவமோ

பொய்யே வாழ்க்கை
உனக்காய்ப்போனது
உண்மைதனைப் பேசி
ஒருமுறை வாழ்ந்துபார்
நீயே உன்னை புரிந்துகொள்வாய்

பெரிய வட்டத்துக்குள்
சிறுபுள்ளி நீயென்று
அறியும் காலம்தான்
உனக்கெப்போதோ

அதையுணறும் காலத்தில்
உன்னிடம் மிஞ்சியிருப்பது
உன் தனிமையும் முதுமையும்
புரிந்துகொள் மனிதா..!!!

எழுதியவர் : - ஜோ - (12-Jul-12, 9:30 pm)
சேர்த்தது : sahaana16
பார்வை : 241

மேலே