இரு மன உரசலில்

இரு மன உரசலில்
கண்ணீர் சாரல் !!!

உணர்வுகளுக்குள் கலகம் ஏற்படுத்திய
என் MODERN தோழியே !!!

நீ என்னில் இருந்த இடம்
இன்று வெற்றிடமாய் !
நான் திரையாய் நிற்க,,,
மண் தரையில் என் சோக காவியங்கள்
வெற்றி நடை போடுகின்றன – என் நிழல்களோடு !!!

தொலைந்தது என் கனவுகள் மட்டுமே….
நினைவுகள் அல்ல…
அவை இன்னும் உயிரோடு உறவாடி கொண்டு தான் இருக்கிறது!!!

நீ பேசிய என் உறக்கமில்லா இரவுகள்
இன்று ஊமையாய் ஓர் இருட்டறையில்….
என் இரவுகள் உன் வரவில் சற்று விடியட்டுமே!!!

இனியவளே…
நீ சூடிய மலரில்
வண்டுகள் மொய்ப்பதையே தாங்க முடியாதவன் நான்..

புரிந்து கொள்ளடி என்னை…

காதல் என்னும் விஷம் பருகி
என் மன உளைச்சலை வேஷம் என்கிறாயே!!!
எடுத்து சொல்ல வார்த்தையின்றி
மௌனம் சாதிக்கும் என்னிடத்தில் தானா
உன் வார்த்தை விளையாட்டுக்கள்…!!!

போதுமடி…

என் உள்ளத்தில் பொறிக்கப்பட்ட
நம் சித்திரங்கள் சித்தரிக்கும் நம் சரித்திரத்தை
- உண்மை அன்பு மதிக்கப்படும் வரை….

நாள் வரும் நீ புரிந்து கொள்வாய்…
நம் அன்றைய நட்பை கொண்டாட
என் கல்லறை கதவுகள் திறந்தே இருக்கும்!!!
- உன் வருகைக்காக…. !!!

அன்புடன்
ரசிகன்

எழுதியவர் : ரசிகன் (1-Oct-10, 10:33 pm)
சேர்த்தது : Rasigan
பார்வை : 603

மேலே