காலத்தின் முனகல்.
மௌனமாய் .....
தடையற்ற அருவியென..
கண்ணீர்...
கரையற்ற இரு வழியினூடே.
மனதின்...
அடங்கா அலைகளின்
பேரிரைச்சல்...
வெளித் தெரியாத
நிசப்தமென.
எல்லைகள் தெரியாத
நீட்சியில்
சோர்ந்தது வாழ்வு.
நிரந்தரமாய்-
கருணையை வெளிக்காட்டாத
காலத்தின் கால்களால்
ஓடிக் கொண்டிருந்தோம்.
நிராகரிப்பின் புழுக்கத்தில்...
தகித்துக் கருகி
நீள்கிறது பயணம்.
பெரும் துயருறும் விழிகளைத்
துடைக்கவென...
ஒரு கரமும் நீளாமல்..
படரும் இரவுகளில்...
அதிகரித்துக் கொண்டே....
அழிகிறது....
ஒரு காலத்தின் முனகல்...
என் நினைவுகளில்....
காலத்தின் இருப்பை
விஷமாக்கியபடி.