ரம்மியமானவன் நீ !

எப்படி
சொல்ல முடியும்
எல்லாவற்றையும்
விட
என்இதயம்
விரும்புவது உன்னை
மட்டும் தான் என்று !

மழை நேர காப்பி
தலை வலியின் போது
தேடாமலே கிடைக்கும் தைலம்
யாரிடமும் திட்டேவாங்காத நாட்கள்
டிராபிக் இல்லாசாலை
பசிநேர உணவு
நண்பர்களின் வரவு
இதைஎல்லாம் விட
மகிழ்வு எது தெரிமா?
காலை அவசரத்தில்
சமையல் அறையில்
சத்தமில்லாமல் நீ
தரும்
அந்த ஸ்பரிச முத்தம் !

எத்தனை சண்டை
போட்டாலும்
சாரிடா !என்றால் போதும்
சகஜமகிவிடுவாய் நீ !

என்னடா
ரொம்ப வேலையா?
நீ
கேட்கும் கேள்வியிலே
என்
உடல் வலியெல்லாம் ஒவ்வெடுக்கும்..........!

வாழ்நாள் முழுதும்
அழுதுகொண்டே இருக்கலாம்
என தோன்றும் ,
என்னை
மார்போடு அணைத்து
நீ
கண்ணீர் துடைக்கையில் !

கண்ணுக்குள் நீர் முழ்க
கைபிசைந்த படி
நீ
அனுப்பிவைத்தாய்
அத்தனை நாள்
சொர்கமாய் தெரிந்த
அம்மா வீடு
நீ விட்ட நொடி
நரகமானது !

பிரசவ வலியின் போது
நான்
வலியால் தவித்தேன் ,
எனக்கு
வலிக்கிறதே
நீ துடித்தாய்,
உன் துடிப்பு ,
என் தவிப்பை விட
பெரியதுடா..............!

ஒருநாள் மாலை
உப்புமா செய்து
எழுப்பினாய் என்னை ,
இனிக்கிறது என்றேன்
லூசு !இதுஉப்புமா !என்றாய் ,
உன் கைப்பட்டதால்
இனிக்கிறது !
என்றேன் ........
போடி ..............
என்று என்னை பார்த்தாய்
ஐயோ .......................................................
ஆண் வெட்கம்
அவ்வளவு அழகு ...!

காதலில் கரைந்த
அந்த நிமிடம்
என்
கல்லறை வரைக்கும்
இனிக்கும் !

எதைஎதையோ
அழகு
என்கிறார்களே ,
உன் காதலை விடவா ,
அதுஎல்லாம்
அழகு.............?

சண்டை போட்டு விட்டு
சமாதனம் செய்ய
பக்கத்தில் வந்து
நீ
உதிர்க்கும்
புன்னைக்கு மட்டுமே
தெரியும் ,
உன்
ஒரு சில நொடி
வெறுப்பை கூட
என்னால்
தாங்கிக்கொள்ள முடியாது என்று !

எத்தனையோ மோதல்
எத்தனையோ ஊடல்
எத்தனையோ கவலை
எத்தனயோ கடன்
இருந்தாலும்
வாழ்வு இனிக்கிறது ,
நீ
என்னுடன் இருக்கிறாய்
எனும் போது ...........................................!

இறைவனிடம்
ஒரே ஒரு வரம் !
நான்
மரிக்கும் போது கூட
உன் மடியில் தான்
மரிக்க வேண்டும் !
மறுபடியும் உன்னையே
மணக்க வேண்டும் .............!

எழுதியவர் : யாத்விகா (24-Jul-12, 7:35 pm)
பார்வை : 544

மேலே