அம்மா சொன்ன பொய்
நான் சிறுவனாக இருந்தபோது
நிலவை காட்டி
சோருட்டிய பாட்டி
இறந்துபோனால் !
பட்டி எங்கே என
தாயிடம் கேட்டேன் ?
நிலவில் இருந்து
பார்ப்பதாக பயம்காட்டினாள் !
சற்று பெரியவன் ஆனேன்
நிலவுக்கு ராக்கெட் சென்றதாக
பாடம் படித்தேன் !
அம்மாவிடம் ஓடினேன்
பாட்டியை ராக்கெட்டில்
அழைத்துவர சொல் என்றேன் !
அம்மா என்ன சொல்வாள்
சும்மா சொன்ன பொய்யால்
சும்மா இருடா முட்டாள்
என என் வாய் மூடினால் !