விகல்பம்,,,,,, சிற்றுண்டி சிறுகதை

விகல்பம்,,,,,, சிற்றுண்டி சிறுகதை,,,,


பேருந்து நிலையத்தில் அங்கும் இங்குமாய்
அலைபாய்ந்து நடந்துகொண்டிருக்கும்,,
ஆயிரக்கணக்கான பேரில் அன்று நானுமொருவன்

பேருந்திற்காக எதிர்ப்பார்த்து காத்துகொண்டிருந்த
ஒரு மாலை நேரம்,,,,

புறத்து சாலையிலே இரு முனைகளையும்,,
கடக்க முடியாத அளவுக்கு மக்கள் வெள்ளம்,,,
பேருந்து நெரிசலினால்

அதை கண்கொட்டாமல் இரசித்தபடியே
பேருந்து நிலைய தொடர் நாற்காலியில்
சிறிது ஆசுவாசப்படுத்துவதற்காய் அமர்ந்திருந்தேன் ,,
அன்று பேருந்துவர தாமதமானது,,,

கண்ணசந்தும் அவளை சிந்தித்தநொடியில் ,,,
யாரோ என்னை
பின்னாலிருந்து அழைத்தது போல்
ஒரு அசரீரி,,,

அவளாக இருக்குமோ என
திடுக்கிட்டு திரும்பிய பொழுது
என் பின்னால் யாரும் நின்றிருக்கவில்லை

அன்றும் அவள் அங்கு வரவில்லை,,,,,
நொடிந்த என் இதயபாரத்தின் துடிப்பு வலியிற்கூட
அவளை நினைத்திருப்பதை மறந்துவிடவில்லை நான்

அந்த வலிகளை மௌனமாய்
பேருந்து நிலைய நாற்காலியிடம் உரைத்துவிட்டு
பஸ் புறப்பட ஆயத்தமாகப்போகிறதாக
கண்டக்டரின் எச்சரிக்கைக்கு
செவி கொடுத்தன் சென்றுவிட்டேன்

நீண்டநாட்கள் கழித்து,,,,

அதே பேருந்து நிலையத்தில்
பேருந்திற்காக காத்திருந்த
காற்று வீசிய ஒரு மாலை வேளை,,,
அதுவொரு மாம்பழ சீசனின்
முடிவு காலமாக இருந்திருந்தது

அவளுடைய அதே குரல்
மீண்டும் என்னில் கேட்கவே
பிரமையோ என நினைத்து
சற்றும் திரும்பாமல், சடுதியில்
என் நடையை துரிதப் படுத்தியிருந்தேன் ,,

ஆனால் அன்றும் வழக்கம் போல்
பேருந்து வர தாமதித்தது

அதே நாற்காலியில்
அவளை நினைத்தபடியே
அன்றும் அமர்ந்தவன்,,,

கண்களில் நீர் சூழ நானன்று
அந் நாற்காலியில் எழுதிய வாசகத்தை,,,
என் விரல்களால் வருடினேன்
அப்பொழுது
அதன் கீழே எழுதப்பட்ட இன்னொரு வாசகம்
விரல் துலக்கலில் தட்டுப்பட்டது
அவளின் கண்ணீரின் வடிவங்களாய்,,,,
சில எழுத்துக்குறிப்புகள்,,,,அதில்,,,,

" என்னை மறக்காத உன்னை மறந்ததற்கு
மன்னித்துவிடு,,,என்று,,,,,"

அக்கணம்
மனதை அங்கேயே அவிழ்த்துவிட்டு
என் கால்கள் மட்டும் அந்த இடம் விட்டு தூர நகர்ந்தன

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (24-Aug-12, 12:54 pm)
பார்வை : 734

மேலே