கருப்பு பூக்கள் ...!
![](https://eluthu.com/images/loading.gif)
காதலுக்கு கரு இல்லையென
கண்கள் கலங்குதடி...!
காதல் உறவாடின கைகள் -இன்று
கலகம் செய்குதடி...!
பட்டென்று சொல்லிவிட்டாயடி-இந்தப்
பாவி மனசு தாங்கவில்லையடி ...-நீ
உண்மை சொல்லியிருந்தால் ..நம்
உறவு நிலைத்திருக்குமடி ...!
பணமே பெரிதென ...
பாசத்தை அறுத்து விட்டாயடி...!
பட்ட பாட்டுக்கு பயனில்லையென
பாதம் பரிதவிக்குதடி...!
முத்தாரத்தை அச்சாரமாய்க் கொடுத்து
வித்தாரம் செய்து விட்டாயடி...-உன்
பித்தாக இருந்த எனை
கொத்தாக அரிந்து விட்டயாடி...!
பூவிழி உன்பாதம் பார்த்து
பூஜை செய்தேனடி ...-மனப்
பூமாலையில் கொட்டும்
பூ நாகம் போல் புகுந்து விட்டாயடி ...!
காதல் தேசத்திற்கு -நீ
கலங்கமாகி விட்டாயடி ...!
கல்லறையில் கதறினாலும்
காதல் மன்னிக்காதடி ...!
காலன் பதில் கூறுமுன்
காலம் பதில் கூருமடி...-நீ
காணுகின்ற கனவினால்
கண்ணுறக்கம் ஓடுமடி...!
காதலுக்கு....
காளையின் மனது கண்ணி மாடமடி ...
கன்னியரின் மனதோ வாடகைவீடடி...!
புலருகின்ற பொழுது
புண்ணியம் செய்தடி..-நீ
விடுகின்ற மூச்சில்
எரிகின்ற என் ஆவியும்
கலந்திருக்குமடி ...!.