பட்டு (சவ ஆடை)

உண்பதில்
உயிர்க்கொலை
வேண்டாம்
என்போரே !

உடுப்பதில்
உயிர்க்கொலை
வேண்டும்
என்கிறீரே !

உயிரினும்
மானம்
பெரிது
என்பதாலா ?

அசைவன்
ஆயுளில்
செய்யும்
கொலையை விட

சைவனின்
ஒரு பட்டாடைக்காக
கொல்லப்படும்
பட்டுப் புழுக்கள்
ஏராளம்

சவ ஆடைதான்
சபை ஆடையா ?

எழுதியவர் : ஏகலைவன் (4-Sep-12, 8:51 pm)
பார்வை : 201

மேலே