ஈழத்தின் தர்மம்
காலம் கனிந்தது கண்ணா -எங்கள்
கவலைகள் போக்கிட வா வா
சீலம் கொண்ட உன் வரவை -நாங்கள்
கொண்டாடிவேண்டுகிறோம் வா வா
தமிழரு கென்றும் அநீதி -இங்கே
தமிழருக்கென்று ஓர் சட்டம்
தரணியில் அலைகிறோம் பாராய் -எங்கள்
தாயகம் காத்திட வா வா
பல நெடும் காலமாய் நாங்கள் -பட்ட
வேதனை போக்கிட வா வா
விலங்கினை ஓடிதிட ஓடிவா -நீ
எமக்கு வீரம் கொடுத்திட தேடிவா
தோள்களில் ஆயுதம் சுமந்தோம் -பலர்
சூழ்ச்சியால் பலமெல்லாம் இழந்தோம்
பகலவன் போல் ஒளி கொள்ள- பரந்தாமனே
படை கொண்டு நீவா
வீழாத வீரமே தா தா -நமக்கு
ஆண்டிட எம் தேசம் தா தா
அகிலத்தில் எமினம் ஓங்க -தரணியில்
எம்கொடி ஏற்றிட வரம் தா
தர்மத்தை காத்திடும் கிருஷ்ணா -நீ
விஸ்வ ரூபமாய் வா வா
தாயகம் மீதிலே தொடர்ந்து வாழ்ந்திட -திரு வரம் தந்திட வா வா
சிறைகளில் வாடுது வீரம் -உலக வீதியில் போகுதே தமிழரின் மானம்
அடங்கிய காலமே போதும்-எங்களை
ஆண்டிடும் இனமாய் ஆக்கிட வா வா
பசியோடு இருந்தது போதும் -எங்கள்
தேசம் பறி போனதும் போதும்
பாண்டவர் தர்மத்தை காத்தாய் -இந்த
ஈழவர் தர்மத்தை காக்க நீ வா வா
கிருஷ்ணா