மானம் இருந்தால் மதியாதோர் தலை வாசல் மிதிக்காதே ! கவிஞர் இரா .இரவி .
மானம் இருந்தால் மதியாதோர் தலை வாசல் மிதிக்காதே !
கவிஞர் இரா .இரவி .
தமிழ் இலக்கியம் படித்து இருந்தால்
தன் மானம் தெரிந்து இருக்கும் !
கொலைகாரனே வராதே ! என்று
கொள்கைக் கூட்டம் குரல் தருகின்றது !
மீறி நீ வந்தால் உனக்குத்தான் அவமானம்
மானம் பற்றிய புரிதல் இல்லாதவனே !
இனத்தைக் கொன்று அழித்து விட்டு
இளித்துக் கொண்டு வருகிறாய் ! நீ !
புத்தனின் பெயர் சொல்ல அருகதை இல்லை
பேராசை பிடித்த பித்தன் நீ !
மதம் பரப்ப வருகிறாயா ?
மதம் பரப்ப வருகிறாயா ?
அந்த மதத்தில் நீ இருப்பது
அந்த மதத்திற்கு இழுக்கு !
எறும்பைக் கூட மிதிக்கக் கூடாது
என்பது அவர்கள் நோக்கம் !
இனத்தையே கூண்டோடு அழித்த
ஈவு இரக்கமற்ற கொடூரன் நீ !
தண்டனைப் பெற வேண்டிய குற்றவாளி நீ
தாரளமாக இந்தியாவிற்கு வந்து போகலாமா ?
அய் .நா .மன்றமோ வேடிக்கைப் பார்க்கின்றது
இந்தியாவோ ரத்தினக் கம்பளம் விரிகின்றது !
மனசாட்சி என்ற ஒன்று உனக்கு இருக்குமானால்
மறுபரிசீலனை செய்து பயணத்தை ரத்து செய் !
உன்னால் நடந்த கலவரங்கள் போதும்
உன்னால் இனி ஒரு கலவரம் வேண்டாம் !