மரணத்தைத் தள்ளிப் போடும் கவிதை

இருளில் நடக்கிறேன்
இலக்குகள் கொண்டு
வெளிச்சம் இன்றியே

அகக்கண் வழிகாட்டல்
அகல்விளக்கு போல
அமைந்திடும் எனக்கு !

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

துன்பங்களில் அமிழ்ந்து
துடிதுடிக்கும் நெஞ்சம்
துணையொன்றும் தேடாது

தூக்கிவிட எனக்குண்டு
துரத்தியடிக்கும் தைரியம்
துவண்டுவிட மாட்டேன் !

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>.>>>>

என் தேடல் என்னை
எங்கெங்கோ அழைத்திடும்
எதற்கும் அஞ்ச மாட்டேன்

ஏனெனில் கற்றலில்
ஏகப்பட்ட விருப்பம்
ஏறுநடை போடுவேன் !

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

சாட்டையடி தரும்
சமுதாயச் சாடல்கள்
சளைத்திட மாட்டேன்

பின்வாங்க மாட்டேன்
பிறப்புக்கொரு அர்த்தம்
பிடித்துப் போக வைப்பேன் !

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

தள்ளாட்டம் கண்டாலும்
தன் பிழைகள் ஏற்பேன்
தயங்கிட மாட்டேன்

வாழ்க்கை என் பார்வைக்கு
வளமான சோலை - எனக்கு
வாலிபம் தொடர்கதை !

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

என்னைக் குத்தும் முள்ளும்
எனக்கு வலி தராது - மாறாக
என்னை வழிநடத்தும்

தட்டிக் கழித்துவிட்டு
எட்டிப் போயிருந்தால்
கிட்டிவிடுமா ஒரு பாடம் !

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

போதும் என்று நினைக்க
ஒருபோதும் விருப்பமில்லை
திருநாட்கள் தினம்தினம்

மலரும் மலர்களின் உற்சாகமாய்
மனிதவாழ்வில் மகத்துவமாய்
மரணத்தையும் தள்ளிப்போடுவேன் !

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

எழுதியவர் : புலமி (17-Oct-12, 3:10 pm)
பார்வை : 185

மேலே