பாரதி நீ !
நெருப்புச்சுரியனே !
எரிமலை பிழம்பே !
எங்கள் ஒவ்வொருவரின்
பிரமிப்பின்
உச்சம் நீ !
நெஞ்சுக்குள்
வலிமை சேர்த்து
நிஜத்திற்கு
உரிமை கொடுத்தவன் நீ !
பிரம்புக் கட்டிலுக்குள்
படுக்காமல்
பிரபஞ்சம் வாழ
பேனா
எடுத்தவனே !
உன்னிடம் இருந்து
நாங்கள்
கற்றுக் கொண்டது
எத்தனை எத்தனை ?
வீரத்தை
விவேகத்தை
தன்மானத்தை
தைரியத்தை
தன்னம்பிக்கையை
சாட்டைச்சொல்லால்
சொல்லி சொல்லிக்கொடுத்தாய் நீ !
மரமாய் திரிந்தவனை
எல்லாம்
மனிதனக்கினாய் !
உனக்கு தெரியுமா ?
உன்
குழந்தைப் பாட்டுக் கேட்டால்
மனம்
குதூகலிக்கும்!
உன்
கண்ணனப் பாட்டால்
மனம்
காதலிக்கத் துடிக்கும் !
உன்வீரப் பாட்டால்
தன்மான உணர்வு
தலைதெறிக்க முறுக்கேறும் !
பிடித்தவனே !
எங்களை
மாயப்பிடியில்
இருந்து விடுத்தவனே !
மீண்டும் வா
உன்னைப் போல்
ஒருவனால் மட்டும் தான்
இந்த தேசத்திற்கு
விடிவு வரும் ,
பாருக்குள்லேயே
நல்ல நாடு
என
எங்களால் பரவசம்
அடைய முடியும் !
இன்னும்
பல்லாயிரம் பல்லா யிரம்
பல்லாயிரத்து நூறாயிரம்
பல கோடி
ஆண்டுகள் ஆனாலும்
நீ
வாழ்வாய்
எங்களுக்குள் !
எங்கள் பேனா
எதை
எழுதினாலும் ,
அதில்
உன்சொல்
உன் உணர்வு
உன் கவி
கட்டாயம் கலந்திருக்கும் !
எங்களை
கவிஞனாய் காட்டிக்கொடுக்கும்!
ஏனெனில்
நீ ....................................
எங்களில் ஒருவன்
எங்கள்
உணர்வுகளின் தலைவன் !