பண்டிகை ஏமாற்றம்

நேற்று மிகுந்த கறியானம்
விறகு வெட்டி மணிமுத்து
வீட்டிற்கு துரத்தபடும்...
.......................................................
கிழிந்து போன உடைகள்
மணிமுத்து குழந்தைகளின்
மாற்றுடையாய் அவதரிக்கும்
இன்னும்
செல்லரித்த சட்டங்களும்
பொத்தலுற்ற சட்டிகளும்
கட்டாயம்
அவன் வீட்டிற்கு
கரை சேர்க்கப் படும்
...................................
இவற்றை
விறகு வெட்டும் கூலியில்
கணக்கு தீர்த்து
வெட்கமின்றி பதிலுக்கு
விசுவாசம்
நாடும் மனம்...
.........................
கைப்பையில் பதுங்கும்
பணக்கணக்கில்
பண்டிகை புத்துடையும்
பொன்னியரிசியும்
மணிமுத்து பெயரிலும்
எழுதப் படும் நாளுக்காய்
ஏங்கி ஏமாந்து நிற்கும்
பண்டிகை ........

எழுதியவர் : சிந்தா (9-Nov-12, 8:45 am)
பார்வை : 315

மேலே