என்னைப் பற்றி.... பகுதி 5

நான் ஒரு ரசிகை!
எழுத்துலப்
பூந்தோட்டத்தில்
நடை பயிலும்,
நான்
சந்திந்த
சிலரை பற்றிய
சிதறல் வரிகள்
என் முன்னுரையில்…

எழுத்துலகம்
ஒரு பூந்தோட்டம்
என்றெண்ணி
மலர்களின்
வாசம் நுகர
ஒவ்வொரு செடியாய்
அருகில் சென்று
ரசிக்க தொடங்கினேன்.


படைப்புகளை
முத்துகள் என்றெண்ணி
ஒவ்வொரு சிப்பியாய்
திறந்து ஆராய முயன்றேன்!

பின்புதான் தெரிந்தது
என் பார்வை
பிழை என்று!

ஆம்!
தேடத்தொடங்கி
ஆராயும் போதுதான்
தெரிந்தது
எனது
குறுகிய பார்வையின்
சிறுமை!

இது பூந்தோட்டமும் அல்ல!
இவை முத்துக்களும் அல்ல!
ஆம்!
நான் உணர்ந்தது இதுதான்!

அதிர்ச்சி வேண்டாம்!
உண்மை!
நானே அதிசயித்த உண்மை!

நீங்களும் வாருங்கள்

இந்த அதிசயத்தை
உங்களுக்கும்
காட்ட விழைகிறேன்!

இனி
என்னுடன்
வருபவர்களுக்கு
இந்த உலகின்
பல
புதிய பரிணாமங்கள்
காணக்கிடைக்கும்
என்றே நம்புகிறேன்!

புதிய கோணத்தில்
நான் காணும்
உலகைக் காண
இனி
வரும் அன்பர்களுக்கு
எனது வரிகளின்
பொருள் புரிய
ஒரு பொருள் அகராதியும்
சேர்க்க எண்ணும்..


என் பெயர் மங்காத்தா!

இன்னும் சொல்வேன்!

எழுதியவர் : மங்காத்தா (17-Nov-12, 12:44 pm)
பார்வை : 307

மேலே