குறிஞ்சிமலர்
துரித உணவகம்,
புல்லெட் ரயில்கள்,
சூப்பர் சானிக் விமானங்கள்,
விரைவுப் பேருந்துகள்
மூன்று வருடத்தில்
காய்க்கும் தென்னை,
மாமரங்கள்,என
உலகம் பூராவும்
ஓடிக்கொண்டிருக்கையில்
குறிஞ்சி மலரே !
நீ மட்டும் ஏன்
பன்னிரண்டு ஆண்டுகள்
காக்க வைத்து மலர்கிறாய்?
நீ என்ன ?முடிவை சொல்ல
என்னைப் பலகாலம்
காக்க வைத்த என்
காதலியா?