நிறைவான வாழ்க்கை

சுவாரஸ்யமாக
அர்த்தமுள்ளதாக
மழை நீர் போல
அமைவதே !

வேலை செய்யும் பொழுது
களைப்படையாமல்
இனிய இசையின் உயிர் போல
நிம்மதியாகவே !

நிகழ்வுகளில்
மாற்றமில்லாமல்
வளரும் இளம் துளிரைபோல
அமைவதே !

நல் மனப்பான்மைதான்
மாற்றம் கொள்ளாமல்
கறந்த பாலை போல
அமைவதே !

எந்த வேலையும்
எந்த நேரத்திலும்
கழுதை சுமக்கும் பொதி போல
சுமையில்லையே !

எங்கும் எதிலும்
கோபம் இல்லாத
வசந்த கீதம் போல
அமைதியே !

எங்கும் எதிலும்
பொறுமை மட்டும்
ஆமையின் வெற்றி போல
உயிர்ப்பாகவே !

நிறைவாக
தேரோட்டம் போல
அமைவதே
வாழ்க்கை !!

எழுதியவர் : செயா ரெத்தினம் (26-Nov-12, 3:59 am)
பார்வை : 231

மேலே