மறுபடியும் துவங்கிய இடத்தில்

அவன் மிகமிக அவசரமாகவும், அளவுகடந்த ஆனந்தமாகவும் அவளைச் சந்திக்கக் கிளம்பிக்கொண்டிருந்தான். என்னென்ன எடுத்துவைக்கவேண்டும், என்னென்ன அவளுக்குப் பிடிக்கும் எல்லாமும் தேடித்தேடி எடுத்துக்கொண்டிருந்தான். அவள் இன்றுதான் வெகுநாட்கள் கழித்து வெளியூரிலிருந்து வந்திருந்தாள். ஒரு போன் வந்து அவனின் அந்தச் சூழ்நிலையின் இன்பத்தினைக் கலைத்தது. அதுவும் அவனின் நெருங்கின தொழில் நண்பனின் போன்தான். எடுத்தான்.
நண்பனின் அப்பாவும் அவனின் மாமாவும் ராமேஸ்வரம் செல்வதற்காக மதுரை வருகிறார்கள் என்றும், அவர்களுடன் துணையாக சென்று அவர்களை உதவிசெய்து கவனித்துப்பின் பூனாவுக்கு விமானம் ஏற்றிவிட முடியுமா? என்று உதவி கேட்டான் நண்பன். நண்பனின் வேண்டுகோளை செயல் படுத்தியபின் அடுத்த திட்டத்தினை யோசித்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தான். அதுகேட்டதும் அவள் கோபம் கொண்டாள்.
விமானநிலையத்தில் அவர்கள் வந்திறங்கிய சமயம், வந்திருந்த மாமா கொஞ்சம் நெஞ்சு வலிப்பதாகக் கூறி அமர்ந்துவிட்டார். உடனேயே விமானநிலைய டாக்டர் வரவழைக்கப்பட்டு முதலுதவி கொடுக்கப்பட்டது. ecg கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. பூனாவில் பேசினபோழுது அவர்களை மறுபடியும் சென்னைக்கே கூட்டிச் சென்று விட விரும்பினர். உடனேயே அவன், அவர்களுடன் வந்து இறங்கிய அதே விமானத்தில் பயணமானான். சென்னையில் இறங்கினவுடன் ஆம்புலன்ஸ் காத்திருந்தது. அவர்கள் அனைவரையும் ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பிவிட்டு மணியைப் பார்த்தான். மணி எட்டரை என்றது. உடனே தாம்பரம் சென்று நெல்லையைப் பிடிக்க முடிவு செய்து செயல் படுத்தினான். அவன் வந்து s 1 இல் தொத்தி ஏற ட்ரைன் கிளம்ப சரியாக இருந்தது.
டீட்டீயிடம் மன்றாடி b 3 வில் ஒரு பெர்த்தை வாங்கியபின்தான் மூச்சு வந்தது.
காதலியிடம் பேசலாம் என்று அவளின் செல்லுக்கு அழைத்தான். போனை எடுத்தவள் எதுவுமே பேசாமல் விம்மிவிம்மி அழத் துவங்கிவிட்டாள். எல்லாவகையிலும் அவளிடம் பேசிப்பார்த்தான். பேசவேயில்லை. நீண்டநேரத்திற்குப்பின் அவள், இறந்துவிடப்போவதாக சொல்லிவிட்டு போனை துண்டித்தாள். போட்டுவைத்த திட்டங்களெல்லாம் தவிடுபொடி. பழையகுருடி கதவதெறடி கதையாகிப்போனது.

எழுதியவர் : தீ (19-Dec-12, 8:05 pm)
பார்வை : 293

மேலே