குளக் கனவு
தவளை இளவரசர்கள் பார்த்திருக்க
தாமரைக் குமரிகள் நீராட
தணலெல்லாம் -தண்ணீரில் பரப்பி
நிலாத் தோழி உலா வந்தாள்.
பனி சொட்டும் -அவள்
பார்வை!
நனிச் சோலை -அவள்
மேனி!
அவனிச் சுற்றி -அவள்
பவனி!
குளத்தருகே நின்றவனின்
உளத்தருகே -வந்தாள்!
வழியது தந்தவளை வருடிட செல்லுமுன்னே
விழியது திறந்திட - வந்து போகும் மூச்சாய்
விரைந்தாள் !!!!