குளக் கனவு

தவளை இளவரசர்கள் பார்த்திருக்க
தாமரைக் குமரிகள் நீராட
தணலெல்லாம் -தண்ணீரில் பரப்பி
நிலாத் தோழி உலா வந்தாள்.

பனி சொட்டும் -அவள்
பார்வை!
நனிச் சோலை -அவள்
மேனி!
அவனிச் சுற்றி -அவள்
பவனி!

குளத்தருகே நின்றவனின்
உளத்தருகே -வந்தாள்!
வழியது தந்தவளை வருடிட செல்லுமுன்னே
விழியது திறந்திட - வந்து போகும் மூச்சாய்
விரைந்தாள் !!!!

எழுதியவர் : (2-Jan-13, 11:01 am)
சேர்த்தது : ராவணன் தர்ஷன்
பார்வை : 96

மேலே