புதுகை மணி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : புதுகை மணி |
இடம் | : புதுக்கோட்டை |
பிறந்த தேதி | : 17-Jan-1980 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Oct-2015 |
பார்த்தவர்கள் | : 327 |
புள்ளி | : 9 |
மறதியே நீ வரமா
இல்லை சாபமா !
மனிதனுக்கே உண்டான
வாழ்கை நெருக்கடிகள்
உறவில் மோதல்கள்
சுற்றத்தில் சிக்கல்கள்
வேலை அழுத்தங்கள்
நடுவிலே நாட்டுநடப்புகள்
இதில் எதை கவனிப்பது
எதை விட்டு விடுவது ?
தமிழீழ படுகொலைகளும்
எழுவர் விடுதலையும்
காவேரி தண்ணீருக்கும்
முழக்கமிட்டு உரக்க சொல்லி
நீதிக்கேட்டு நெடும் போராட்டம்
சோர்வடைய செய்யும் நீண்ட
ஆயுள் வாழும் வழக்கினை
எதிர்பார்த்து வருடக்கணக்கில்
காத்துநிற்கும் சமூகத்திற்கு
தீர்ப்பு என்று கிடைக்கும் ?
சாதிய வன்மத்தின் ஆணவக்
கொலைகள் கண்ட போதும்
மதம் பிடித்து அரங்கேறிய
கோத்ரா படுகொலைகளும்
கல்புர்கி மரணங்களும்
அரசியல் பழிதீர்த்த இறப்புகளு
இருள் போர்த்திய
வையம் ஞாயிறு
பொழுதுக்கு தவமிருக்க
நீர்வாழியும் நாணத்தில்
குவிந்து இருந்தாளோ !
சேற்றில் உதித்த
மாசற்ற செந்தாமரை
சுடர்விட்ட பரிதியின்
காதல் வெம்மையால்
இதழ் மலர்ந்தாளோ !
ஒளியாலே மொழி
பேசிய ஆதவன்
பகலொளிக் கதிரால்
ஆரத்தழுவிட கமலம்
காதல் வயப்பட்டாளோ !
இருள் போர்த்திய
வையம் ஞாயிறு
பொழுதுக்கு தவமிருக்க
நீர்வாழியும் நாணத்தில்
குவிந்து இருந்தாளோ !
சேற்றில் உதித்த
மாசற்ற செந்தாமரை
சுடர்விட்ட பரிதியின்
காதல் வெம்மையால்
இதழ் மலர்ந்தாளோ !
ஒளியாலே மொழி
பேசிய ஆதவன்
பகலொளிக் கதிரால்
ஆரத்தழுவிட கமலம்
காதல் வயப்பட்டாளோ !
மழை பெய்ய வானம் முழங்கிய
மேளதாளம் இடி !
செய்தியுடன் நாணி மறைந்த
வெள்ளிக்கீற்று மின்னல் !
வறண்ட போன நிலத்திற்கு
தாகம் தீர்த்த கார்மழை !
நீலமேகத்தில் ஒளிக்கதிர்
வரைந்த ஓவியம் வானவில் !
வெப்பம் தனித்திட பூமிக்கு
போர்வையாக பணிமூட்டம் !
மனம் ரசிக்க இவை தந்தது
அழகிய மழைக்காலம் !
ஒவ்வொரு விடியலும்
புதிய நாள் தருகிறது
இழந்ததை மீட்கவும்
வேண்டியதை பெறவும்
அவரவர் தேவைப்படி
உபயோகமாக பயணித்தால்
மீண்டும் ஒரு வாய்ப்புக்கு
காத்திருக்க தேவையில்லை
மற்றொரு நாள் புதியதொரு
தேவைக்காக மட்டும்..
நேரம் மாறுகிறது
பருவங்கள் மாறுகிறது
மாற்றம் நிலையானது
வேண்டிய மாற்றம்
நமக்கு தேவையெனில்
நாமும் மாறிட வேண்டும்
மாற்றத்தை நிகழ்த்த வேண்டும் !
ஆராரோ கேட்கவில்லை
பட்டுமெத்தை தேவையில்லை
கல்லுடைக்கும் ஓசையே
நானும் தூங்க அன்னை நீ
இசைக்கும் ஆனந்த தாலாட்டு.
நேரம் மாறுகிறது
பருவங்கள் மாறுகிறது
மாற்றம் நிலையானது
வேண்டிய மாற்றம்
நமக்கு தேவையெனில்
நாமும் மாறிட வேண்டும்
மாற்றத்தை நிகழ்த்த வேண்டும் !