நந்தகுமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நந்தகுமார்
இடம்:  நாகர்கோவில்
பிறந்த தேதி :  31-May-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Jun-2016
பார்த்தவர்கள்:  70
புள்ளி:  18

என் படைப்புகள்
நந்தகுமார் செய்திகள்
நந்தகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jun-2016 11:33 am

நக்கி
பிணைந்து
வால் குழைத்து
நழுவாத
தூய்மை
சங்கிலி இறுக்கம்
குலைகையில்
சனியன்!
இந்தப் பாடு படுத்துகு!

இழந்ததால்
அடிமைப்படும்
குழந்தைமை!

அனிச்சையாய்
வெளித்தள்ளும்
உயிர்த்துடிப்பு
அகம் நிறைக்க
எனக்கே எனக்கானதாய்!

ஈறு விறைத்து
மூர்க்குகையில்
நாக்கு சொட்ட
குண்டியிடித்து திணறுகையில்
நிலா முற்ற ஊளையில்
நாய்!

அடித்து
வெறும் பிண்டமாய்
காலிடுக்கில்
வால் சுருக்கி
சவம் விஷக்கடில்லா!

மேலும்

நல்ல படைப்பு..நன்றி என்பதை மறக்கும் உலகின் காட்சியில் அதை இன்னும் வெளிப்படுத்தும் உயிர் 19-Jun-2016 5:33 pm
நன்றிஉள்ள ஜீவனுக்கு ஓர் நற்கவி இனிது! வாழ்த்துக்கள் நண்பரே! 19-Jun-2016 4:24 pm
நந்தகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jun-2016 11:17 am

யோனி கிழிந்து
அறுபடும்
தொப்புள் கொடியின்
வேட்கையில்
சுரந்த பசி!

விம்மி
மூச்சிறைத்து
எடு எடு என்றது
தாகம் தாகம் என்றது
விடுபடும்
நிகழ்காலம்
சென்று பால் சப்பியது!

அடக்கும் குருதி
நிறைத்த
பெருங்கனா
ஒற்றை விந்துவை
தீர்த்துக்கட்டுமா?

வான் உந்தும்
குறி
பற்றிக்கொண்ட
மண்!

வெட்டையில்
நிரம்புவது
முலைகளும் முகங்களும்
தகிக்கும் கருவறையின்
மென்மொட்டு
விரிந்திருந்து
விந்து தேடும்
கண்களில்
கொற்றவையும் மரியாளும்!

பூமியம்மை
விழுங்கிய அனல்
குளிர்ந்தும் கனன்றும்
வான் புணரும்
ஆதிக்கவர்ச்சியில்!

நிறைவென்பதன்
மடியில்
அணைந்திருந்து
முலைகள் ததும்பும்
பாலாழி!

மேலும்

ஆறாத காயங்களில் முடிவில்லா ரணங்கள் தான் மாத்திரைகள் 19-Jun-2016 5:29 pm
நந்தகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jun-2016 2:13 pm

ஆம் என்பதிலும்
சாத்தியப்படுதலிலும்
எனக்கானதென சேமிக்க
நிறைவின்மையை
உறுதிப்படுத்தும் பொழுது!

எல்லையின்மையின்
துளியில்
வகுக்க எனக்கான
எல்லையைத்
தேடும் பொழுது!

கரையும்
நொடித்துளிகளின்
கட்டுப்பாடின்மையில்
எதிர்காலத்தின்
'நிச்சயமின்மை
பரிகசிக்கும் பொழுது!

உணர்வின் முடிச்சுகளில்
சுயம் வகுக்கும்
நிம்மதியில்
மரணம் தீர்மானிக்கும்
அலைக்கழிப்பில்!

தனிமை
சுவீகரிக்கும்
"நான்"
என
நானே நம்பும் பொழுது!

வலுத்துக் கிடக்கும்
அழுத்தம்
நிராகரிக்கும்
பொழுதுகள்
என்றைக்குமானதாய்
அசை போடும் பொழுது!

வலியின்
சிறு துகளிலும்
உடையும்
நெகிழும்
முட்டிக் கொண்டு
ஆசுவாசப்படும்

மேலும்

நிலைகள் மாறியும் நிலையின்றி நகராது மனித மனம் உண்மைதானே! 17-Jun-2016 2:39 pm
நந்தகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jun-2016 2:03 pm

எச்சில் தெறிக்க முத்தி
கழுத்தைக் கட்டிக் கொள்ள
அவள்
அக்குள் நறுமணத்தில்
சீலை வாசனையில்
மடி கிடத்தி
கருவறை நுகர்ந்து
குதூகலிக்கும்
என் குழந்தைமை!

அவள் ஸ்பரிசிக்கும்
உறுப்புகளிலெல்லாம்
ஜீவனின் பரிசுத்தமானது
குருதி பீறிட்டு
தழும்புமோ!

காற்று நிரப்பிய
பலூன் பறத்தும்
ஒட்டு மொத்தமான
தொடுகை
காற்றுக்கும் காற்றுக்குமானதாய்!

வேறொன்றாய்
இன்னொரு ஆளாய்
என்னை நானே
தொடுகையில்
நிசப்தித்து
நான் நான் என்றேன்
ஆமாம்! நீ நீ என்றது!

முலையுண்ண
நான் ஸ்பரிசிக்கும்
காம்பு நிறைப்பது
ஆதியான மெய்மையில்
அம்மை பொழிய
நித்தியமான என் பசி!

உடைந்து கிடக்கும்
இரவுகளெல்லாம்
ஸ்பரிசங்களின்

மேலும்

அருமையான வரிகள்! வாழ்த்துக்கள் நண்பரே! 17-Jun-2016 3:10 pm
உண்மைதான்...நிதர்சனங்களின் சிந்தையில் வீரியமான கவிதை வாழ்த்துக்கள்! 17-Jun-2016 2:37 pm
நந்தகுமார் - நந்தகுமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jun-2016 1:44 pm

தெளிவில்லா
கரணங்களை
தீட்டிக் கொள்ளும்
மொன்னைக்கத்தி
கிழித்து
சிறுதுளி உயிரணு!

உவகை மேலிடும்
நிச்சயமானது
சூழ்ந்து கொண்ட
நொடி
வெறுமை!

சிதறும்
ஒளிக்குவியல்
கட்டவிழ்த்த
காலமின்மையெனும்
உடைந்த
குவியாடி!

தன்னிரக்கம்
மீட்டி
தந்தியறுக்கும்
அபஸ்வரம்!

எல்லையின்மையில்
முட்டி
திகைக்கும்
அழியாப் புகழ்!

இருந்தும்

பூமி
தொங்குவதோ
வானத்துக்கும்
வானத்துக்குமான
பயண
இடைவெளியில்!

மேலும்

உண்மைதான் நண்பரே! உயிரை கண்களால் பார்க்க முடியாது ஆனால் கவிதைக்குள் பார்க்கலாம் 17-Jun-2016 2:32 pm
நன்றி! 17-Jun-2016 1:56 pm
அருமை.... வாழ்த்துக்கள் .... 17-Jun-2016 1:55 pm
நந்தகுமார் - நந்தகுமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jun-2016 1:43 pm

மரணத்தின் மூடி கவிழ்ந்து
உள் தள்ளும்
அணுக்க உயிர்களின்
இன்றியமையாதிருக்கும் ஒன்று
கவிதைகளின் புணர்வெளிகளில்
சிதறுண்டு கிடக்கும்
அந்த மண்டையோட்டுகளின்
எக்காள இளிப்பின் ரகசியங்கள்
உடைந்தெழும் தருணம்
விம்மல் பீடிக்கும் மனம்
நாடிச்சென்று
உயிர்களின் எஞ்சியிருக்கும்
படிமங்களிடம்
தங்களின் ரகசியங்களையும்
பகிர்ந்து கொள்வதில்
மர்மம்
ஏதுமில்லைதானே?

மேலும்

நன்றி! ஆம்! ரகசியங்களின் பகிர்வு சாத்தியமாக்கப்படும் சூழலோ என்னவோ??? 17-Jun-2016 1:39 pm
மர்மங்கள் தான் மனிதனுக்குள் என்றும் வேதமாகிறது..நிதர்சனங்களின் பாதையில் புரியும் பயணங்கள் 16-Jun-2016 10:35 pm
நந்தகுமார் - நந்தகுமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jun-2016 1:36 pm

உடுக்கை
அவிழ்த்து எழும்
அதிர்கின்ற சுகந்தம்
தொட்டெழுப்பும் நுனி
விகாரம் அமிழ்த்திய
இன்னொன்றிலும்...

பிண்டமாய்
தொலி போர்த்தி
நகரும் பொருண்மை
மெய்மை உணர்தலில்
இன்னொரு பிண்டத்திடம்
நிச்சயம்
மண்டியிடும்!

நிலைத்தன்மை
உருக்க
அனல் கக்கிப்
பரவுமோ
இந்த நிர்வாண சாசுவதம்!

புணர்வு
சாத்தியமாக்கப்பட்டது
நிர்வாண உயிர்களுக்கானதாய்!

கழிவறையிலும்
பிணவறையிலும்
நிர்வாணங்கள்
பேணப்படுதல்தான்
ஒட்டுமொத்த வடிகால்!

நிர்வாணமாக்கப்பட்டதன்
நோக்கம் வேண்டுமா?
ஆடியில்
துடிக்கும்
உன் குறியைப்பார்!

மேலும்

மிக்க நன்றி! 17-Jun-2016 1:38 pm
அற்புதம்..மறைவின் குறையை விட்டு விட்டு வெற்றுடல் மறைவை தேடும் கண்கள் தான் மண்ணில் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Jun-2016 10:34 pm
நந்தகுமார் - நந்தகுமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jun-2016 1:27 pm

உன்
மகிழ்வையும்
வேதனையும்
தாங்கிப்பிடிக்கும்
சிலுவையில்
குருதி கொப்பளித்து
பலியுண்டு கிடக்கிறது
என் சுயநலம்!

சாசுவதமான
அன்பு
நிர்கதியாய்
நிற்கையில்
நாம்
காதலர்களாவோம்!

நீயும்
நானும்
என்ன்னுடையதும்
உன்னுடையதுமானதில்
நம் நிர்வாணம்
ஓலமிட்டது!

நீ
எனும் தழுவலில்
மாசு மருவற்று
பல்லிளிக்கிறது
சுயம் எனும்
நான்

உன்
வேர் தகிப்புற்று
உறிஞ்சும்
நான்
நான்! நான்!
என வீண் ஜம்பம்!

சாபக்கிடக்கில்
அமைதியற்று
உறங்கும்
ராட்சச ஜீவனின்
கனவுகளில்
நீயும் நானும்
புணர்ந்து கொள்வோம்!

என்
இறுதிச்சடங்கில்
உன்னுடையதை
அவிழ்த்து விடும்
ஒன்று
உண்டெனில்
நிச்சயம் அத

மேலும்

நன்றி! ஆம்...அகம் கொந்தளிக்கையில்!!! 17-Jun-2016 1:37 pm
கவிதை எங்கோ அழைத்துச் செல்கிறது..வாழ்க்கையின் புரிதலில் தான் சுமையும் சுகமாகிறது..சுகமும் சுமையாகிறது 16-Jun-2016 10:32 pm
நந்தகுமார் - நந்தகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jun-2016 1:27 pm

உன்
மகிழ்வையும்
வேதனையும்
தாங்கிப்பிடிக்கும்
சிலுவையில்
குருதி கொப்பளித்து
பலியுண்டு கிடக்கிறது
என் சுயநலம்!

சாசுவதமான
அன்பு
நிர்கதியாய்
நிற்கையில்
நாம்
காதலர்களாவோம்!

நீயும்
நானும்
என்ன்னுடையதும்
உன்னுடையதுமானதில்
நம் நிர்வாணம்
ஓலமிட்டது!

நீ
எனும் தழுவலில்
மாசு மருவற்று
பல்லிளிக்கிறது
சுயம் எனும்
நான்

உன்
வேர் தகிப்புற்று
உறிஞ்சும்
நான்
நான்! நான்!
என வீண் ஜம்பம்!

சாபக்கிடக்கில்
அமைதியற்று
உறங்கும்
ராட்சச ஜீவனின்
கனவுகளில்
நீயும் நானும்
புணர்ந்து கொள்வோம்!

என்
இறுதிச்சடங்கில்
உன்னுடையதை
அவிழ்த்து விடும்
ஒன்று
உண்டெனில்
நிச்சயம் அத

மேலும்

நன்றி! ஆம்...அகம் கொந்தளிக்கையில்!!! 17-Jun-2016 1:37 pm
கவிதை எங்கோ அழைத்துச் செல்கிறது..வாழ்க்கையின் புரிதலில் தான் சுமையும் சுகமாகிறது..சுகமும் சுமையாகிறது 16-Jun-2016 10:32 pm
நந்தகுமார் - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jun-2016 3:45 am

நேற்றைய உங்களின் இறந்தகாலம்
நாளைய எங்களின் பசுமைக் கோலம்

தொலைத்துவிட்டுத் தவிக்கும்
உங்கள் வசந்தகாலத்தை
எடுத்துக்கொண்டு குதிக்கிறோம்

கையில் எதுவுமற்று
சந்தோசமாய் இருக்கும் நாங்களும்
கையில் எல்லாம் வந்தபின்னும்
இந்தக் காலத்தை தொலைத்திருப்போம்
ஒருநாள் ..

நாளைய துக்கத்தை ஆராய்ந்து
இன்றைய சந்தோசத்தை தொலைக்கும்
சங்கடம் எங்களிலில்லை
அதுவரை ஆனந்தம் என்பதைமட்டும்
சிலாகிப்போம் வாருங்கள்
எங்களின் மூங்கில் காட்டோரம்
*மெய்யன் நடராஜ்

மேலும்

மிக்க நன்றி சர்பான் 16-Jun-2016 11:03 am
மிக்க நன்றி தோழரே 16-Jun-2016 11:02 am
மிக்க நன்றி ஐயா. 16-Jun-2016 11:01 am
நன்றி 16-Jun-2016 11:01 am
நந்தகுமார் - நந்தகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jun-2016 8:23 pm

எச்சில் ததும்பி
எதிர்பார்க்கும்
என்னுடையது
இறுக்க கப்பிக் கொண்டு
சொப்பனங்களாய்
இல்லாமையில் குதித்து
நாளையை
விற்றுக் கொண்டிருந்தது!

அடர்த்தியாய்
முடிவிலி
கிளர்த்தும் கவர்ச்சி
மாமிச வரையறுப்பில்
பாயும் நான்
அங்கிங்கெனாதபடி
மோப்பம் பிடிப்பது
நித்தியமாய்
தீண்டும்
அவளாகிய
ஸ்பரிசம்!

நான் என்பதும்
என்னுடையதாய்
அடைவதும்
நொடித்துளி
அனிச்சையாய்
கரையும்
சொட்டு உயிரணு!

பால்யம்
நாக்கு நீட்டி
புதைக்கும் விதை
ஆண்மமாய்
வியத்து நோக்கும்
மொத்தமும்
அவள்! அவள்! அவள்!

அனிச்சையாய்
நிறைக்கும்
திருப்தியின்மையெனும்
வெளியில்
கொதி பிடித்த
புது சந்ததிகளாய்
மனிதம்!

தீர

மேலும்

நன்றி! 16-Jun-2016 1:24 pm
இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Jun-2016 5:56 am
வீரியமான எழுத்துகள் ஆனால் உருக்கம் நிறைந்த வருடல்கள் 16-Jun-2016 5:56 am
நந்தகுமார் - நந்தகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jun-2016 8:15 pm

வானம் உறிஞ்சிய
பெண்ணுரு
கொப்பளித்த மேகம்
அந்தி நிறைக்கும்
சிவப்பு
முத்தத் தீற்றலாய்
கடலில் பொங்கி
நிறைத்தது!

சமுத்திரம்
விழுங்கும்
நிலவலையில்
ரகசியங்கள்
சுமக்கும் மேகம்
கிழிந்து
கசியும் கருமை!

அகப்படா
எல்லையின்மையில்
பயம் எனும்
மரண நுனியில்
திளைத்து
வந்து போகும் அலை!

துடிக்கும்
அமைதியின்மையை
தொடும் வானம்
புணர்ந்து
பகலும் இரவும்!

முங்கிய
காலடிகள்
அழிந்து
நித்தியமானதில்
விட்டகலா மண்
இங்கு
உப்பானது!

நீர்வெளிப் பொத்து
உந்தும்
நிலாப் பறவை
உதிர்த்த
விதைக்கனா!

அசைவின் மூர்ச்சை
இழுத்த
அலையடிப்பு
ஆழி மௌனத்தில்
சாசுவதமான
பேரதிர்ச்சியில்!

மேலும்

நன்றி! 16-Jun-2016 1:25 pm
இயற்கையின் இலக்கணத்தில் அழகான கண்காளிப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Jun-2016 5:54 am
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (2)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

மேலே