நிஷா ராஜ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : நிஷா ராஜ் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 08-Apr-2020 |
பார்த்தவர்கள் | : 19 |
புள்ளி | : 0 |
உன்னை தொடும் ஒவ்வொரு நேரமும்....
ஒவ்வொன்றை உணர்த்துகிறாய் உணர்வுதனில்....
தேடுதல் ஒரு வேட்டையாம்🤔....
தேடி கொண்டேதான் இருக்கிறேன்😊
கிடைக்கும் போதெல்லாம் நல்லவனாய் உணர்த்துகிறாய் நீ 📖...
உன்னை உணர்ந்த நானும் நல்லவள் தானா என்ற விடையளிக்காமல்.....
உன்னில் முழுமையாய் வாழவே விரும்புகிறேன்...
முயற்சித்து பார்த்தேன் முடியவில்லை...
இதனால் நிச்சயம் இழப்பு உனக்கல்ல...
எனக்குதான் என தெரிகிறது...
ஆனாலும் ஏன் இந்த இடைவெளி விரிகிறது...
இன்னும் முயற்சித்து கொண்டே தான் இருக்கிறேன் உன்னில் முடிய❤.....
இப்படிக்கு புத்தக நேசகி💁...
உன்னை தொடும் ஒவ்வொரு நேரமும்....
ஒவ்வொன்றை உணர்த்துகிறாய் உணர்வுதனில்....
தேடுதல் ஒரு வேட்டையாம்🤔....
தேடி கொண்டேதான் இருக்கிறேன்😊
கிடைக்கும் போதெல்லாம் நல்லவனாய் உணர்த்துகிறாய் நீ 📖...
உன்னை உணர்ந்த நானும் நல்லவள் தானா என்ற விடையளிக்காமல்.....
உன்னில் முழுமையாய் வாழவே விரும்புகிறேன்...
முயற்சித்து பார்த்தேன் முடியவில்லை...
இதனால் நிச்சயம் இழப்பு உனக்கல்ல...
எனக்குதான் என தெரிகிறது...
ஆனாலும் ஏன் இந்த இடைவெளி விரிகிறது...
இன்னும் முயற்சித்து கொண்டே தான் இருக்கிறேன் உன்னில் முடிய❤.....
இப்படிக்கு புத்தக நேசகி💁...
குழந்தையடி நீ எனக்கு
குமரி பருவம் எய்தயிலும்
ஆசை அரும்பாய் மலர்ந்த போது
அள்ளி தான் கட்ட விளைந்தேன்
நெய்யும் தறி நூலை போலே
நேசத்தோடே நெருங்கி பிணைத்தேன்
மையல் இது போதாதென
மஞ்சத்தில் இடம் கொடுத்தேன்
மாதம் பத்து செல்லதான் - என்
மாமன் வீடு நீ சென்றாய்
மங்கை திரு மேனியெல்லாம்
மாற்றத்தால் நிரம்ப கண்டேன்
வேல் விழியாள் விழி தன்னில்
வேதனை தான் அரும்ப கண்டேன்
உயிர் நாடி ஒடுங்குதடி - உன்
உயிர் கூச்சல் கேட்கையிலே
வீரமடி தான் உனக்கு
பெரும் வேதனைகள் தாங்கையிலே.
பாரமடி தான் எனக்கு
படும் பாட்டை நான் பார்க்கையிலே.
உலகத்தின் சப்தம் எல்லாம்
ஒரு ந
வண்ண மொட்டு தனை
தேன் சொட்டுதனை
சின்ன சிட்டுதனை
சிறு வயது பட்டுதனை
சிதைத்து விட்டனரே.....
பூப்படைய போகுமுன்னே
புதைத்து விட்டனரே - இம்
மூப்படைந்த சிற்றினங்கள்....
கற்பென்ற அர்த்தம் ஒன்றை
கண்டிராத சிறுபெண்ணிவளின்
கனவு தனை கலைத்து
கற்பினையே அழித்த உனை
கருதறிக்குமுன் அறிந்திருந்தால்
கருதனிலே அழித்திருப்பாள்
பெற்றாயினும் உன்னை...
கழுமரத்தில் ஏற்றிருப்பாள்....
வண்ண மொட்டு தனை
தேன் சொட்டுதனை
சின்ன சிட்டுதனை
சிறு வயது பட்டுதனை
சிதைத்து விட்டனரே.....
பூப்படைய போகுமுன்னே
புதைத்து விட்டனரே - இம்
மூப்படைந்த சிற்றினங்கள்....
கற்பென்ற அர்த்தம் ஒன்றை
கண்டிராத சிறுபெண்ணிவளின்
கனவு தனை கலைத்து
கற்பினையே அழித்த உனை
கருதறிக்குமுன் அறிந்திருந்தால்
கருதனிலே அழித்திருப்பாள்
பெற்றாயினும் உன்னை...
கழுமரத்தில் ஏற்றிருப்பாள்....
உன் விழி வழி வருகிற ஒளியினால்
மொழி பெற்றவள் தான் நான் -
எனினும்
பரந்த உன் கதிர்கள்
விரிந்த என் இதழ்களுக்கானது
அல்ல...
உன் வாசத்தினால் சுவாசம்
பெற்றவள் தான் நான் - எனினும்
உன் வாசம் என் தேசம் வருவது
என் சுவாசத்திற்கானது அல்ல...
என்றுணர்ந்த பின்பும் - என்
எதிர்பார்ப்புகளின் ஏணிப்படிகளை
எண்ண கூட முடியவில்லை-
என்னால்
உலகிற்கு கதிரவன் ஆன நீ - என்
ஒருத்திக்கு மட்டும் புதிரவன்
ஆனாய்
புதியவனும் ஆனாய்....
தெரிந்த மொழியினை கூட
தெரிய படுத்த வழியின்றி
உதிர்ந்து போகிறேன் ஊமையாகி
உன் மறுநாள் உயிப்பில்
காலை கதிரவனும்
கண் சிமிட்டும் நிலவவளும்
காதல் கொண்டனவோ - அதன்
காரணமாய் அலைந்தனவோ....
காலை மாலையென
கதிரவனும் தான் அலைந்து
காதல் நிலவவளை
காணாமல் தான் நொந்து
தேடி தேடியே தினமும் வலம் வந்து
தேன்நிலவவளும் தேய்பிறையாய் தான் தேய்ந்து....
நிலவவளை காணாத கவலையிலே
மறைவானோ கதிரவனும் மாலையிலே
கதிரவனின் கதிர்களதன்
நினைவினிலே - குளிர்
காய்வாளோ நிலவவளும் இரவினிலே.....
மாலை பொழுதினிலே
மதி மயக்கும் பொழிவினிலே
என்னுள் நீ உரையாடினாய்
எனை அறியாமல் நானும்
உறவாகினேன்
உன் மெல்லிய தீண்டல்களில்.....
பொன் மேகங்கள் மட்டுமல்ல
மென் தேகங்களும் சிலிர்த்தன
உன்னை வினவத்தான்
விரும்புகிறேன்
விரும்பி நினைத்தும்
விளையவில்லை
விளக்க முடியா தென்றலே.....
உன் உயிர் மெய்யினை உலகுக்கு உணர்த்தாத நீ...
என் உணர்வுகளில் கலந்தது தான் ஏனோ?