ஷேத்ரபாலன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஷேத்ரபாலன் |
இடம் | : Madurai |
பிறந்த தேதி | : 23-Jun-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Jun-2016 |
பார்த்தவர்கள் | : 79 |
புள்ளி | : 10 |
விடைபெற வேண்டிய நேரம் வந்தது என்று எச்சரிக்கை மணி ஒலித்ததோ என் கவிதையே...!!!
சத்தம் இல்லாமல் விலகிக் கொள்ள என் மனதிற்குத் தெரியவில்லை...
குற்றவுணர்ச்சி என்னை உன் முன்னால் மண்டியிட செய்கிறதடி..
இதயத்தில் பாரம் உணர்கிறேன்..
காதலின் ஒருவித விந்தையை தற்சமயம் உணர்ந்தேன்...
விலகிச் செல்லும் நேரத்தில் பாரம் கூடுகிறதே தவிர குறையவில்லை அறிவியலுக்கு மாறாக...!!
சுமை அனைத்தும் நீ என் மேல் வைத்த காதலா... ??
இவ்வளவு கணமாக உள்ளது!!!.
உலகத்தில் மிக உயர்ந்தது கண்ணீர்த்துளி...
அவை உனக்காக என் இமை வாசலை தாண்டுகிறது...!!
பத்திரமாக பார்த்துக்கொள் நம் நினைவுகளை..!!
உனக்காக நான் ஒன்றும் செய்யவ
வலியா இல்லை சுகமா!
விழித்திரை மூடித் திறக்கும் பொழுது கண்களின் மனநிலை என்னவோ!
இப்படி பதில் தெரியாமல் இருந்த என் உள்ளத்திற்கு இருளில் சற்று வெளிச்சம் கிடைத்தது போல் மனதின் ஒரமாய் புலப்பட்டது " தனிமை சுகமே".!!
இரவில் விளக்கு வெளிச்சம் தரும் என்பது சராசரி மூளைக்கு தெரிந்த விஷயம்,.. வெளிச்சம் என்பது இருளை தாங்கி நிற்க்கிறது என்பது மனதின் ஆழ்நிலை...
இருள் என்பது பயம் என சித்தரிக்கப்பட்டு விட்டது..!!
மனதோ வேறு வழியின்றி அதை உண்மை என ஏற்றுக்கொண்டது...!!
வயது முதிர்ந்தாலும் மனம் என்பது குழந்தை அல்லவா...!!
பழகித் தெரிந்து கொள்ளும் குணமோ மனதிற்கு..?
தனிமையில் இருள் என்பது அரவணைப்பு
வெகுநாட்களுக்கு பின் அலைபேசியில் உன் குறுஞ்செய்தி!
மனதோடு நாட்களும் பின்னோக்கி பயணித்தது....!!!
உன்னை நீ முதன்முதலில் என்னிடத்தில் பதிவு செய்தது இந்த குறுஞ்செய்தி வாயிலாய்!!
காரணமின்றி ஆயிரம் முறை பார்த்திருப்பேன் உன் குறுந்தகவலை!!
எழுத்துக்களில் உன் உருவம் கண்டேன்...!!
முதன்முறை இடைவெளி புரிதலின் ஆழத்தை உணர்த்தியது..!
மன்னித்துவிடு என்று தப்பிக்க விருப்பம் இல்லை...
என்னை நினைவில் அவ்வப்போது வைத்து பார்த்துக்கொள்.. பார்க்கும் உன் கண்களை எதிர்நோக்கிக் காத்திருப்பேன்...
உண்மைக் கூறவா..??
முன்கோபம் கொண்ட நான் உன்னை அடிக்கடி நினைவுகூர்வது
இன்று எனக்கு உணர்த்தியது... கண்டிப
"கருவிழிகள் இமையோரத்தில்.... புன்னகை இதழோரத்தில்"
முதல் பார்வையில் வார்த்தை இல்லாமல் விருப்பம் உணர்த்தினாள்... சிரித்தேன்... அவளின் புன்னகை இன்னும் பூத்தது...
என் விருப்பத்தை அவள் புரிந்து கொண்டாள் போல!!!
உன்னை எதார்த்தமாக பார்த்த என் கண்கள் உன் ஒவ்வொரு அழகையும் குறிப்பாய் கவனிக்க காரணம் என்னவோ!
உன்னை ரசிப்பது மட்டுமே என் வாழ்க்கை என்று ஒரு வரமோ சாபமோ தரமாட்டாயா!
உன் இதழ்களை கவனிப்பதை அறிந்து விட்டாயோ!.. உன் பற்கள் கொண்டு அவற்றை மறைக்க முற்படுகிறாய்..!
இருப்பினும் ஏதும் அறியாதவளாய் உன் முகம்!
ஆனால் பாவம் உன் கண்களுக்கோ பொய் சொல்ல தெரியவில்லை.
பொய் கூட அழகாக தெரிகிறதே!! காரணம் ரசனை சுரக்கும் நீர்க்குமிழியா நீ!!!
இல்லை நான் கேட்டதால் நீ எனக்கு கொடுத்த வரமா!!!