தணல் தமிழ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தணல் தமிழ்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  06-Aug-1982
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  09-Feb-2022
பார்த்தவர்கள்:  194
புள்ளி:  61

என்னைப் பற்றி...

நான் ஒரு எழுத்தாளி

என் படைப்புகள்
தணல் தமிழ் செய்திகள்
தணல் தமிழ் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-May-2022 1:32 pm

"சின்னஞ்சிறு தோல்வி பள்ளியிலே
விளையாட்டில் தோல்வி நண்பனிடத்திலே
இளம்பருவத்தில் தோல்வி காதலியே
பாசத்தில் தோல்வி உடன்பிறப்பிலே
நடுவயதில் தோல்வி அன்னையிடத்திலே
அழகின் தோல்வி நரையிலே
அழகான தோல்வி வாழ்க்கையிலே.."

மேலும்

தணல் தமிழ் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-May-2022 10:50 am

"தெவிட்டாத தேனாய்
தேனூறிய மலராய்
காயும் நிலவாய்
ஒளிரும் விண்மீனாய்
வான நீல ஒளியாய்
மலரின் குளிர்ச்சியாய்
பனியின் தூய்மையாய்
கேட்போர் மகிழும் இசையாய்
காண்போர் விரும்பும் கொடியாய்
நிகரில்லாத அறிவாய்
கனவில் மறக்காத கனவாய்
நனவில் கண்ட சுகமாய்
கரும்பென இனிப்பவளே
கருவுக்குள் தோன்றியவளே
என்னுள் உயிரானவளே
உயிருக்குள் உணர்வானவளே
எங்கள் அமுதே, வளமே, தமிழே.

மேலும்

தணல் தமிழ் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-May-2022 12:05 pm

"ஒரு தாயிக்கும் பிள்ளைக்குமான உறவு...
கருவிலிருந்து வெளிவந்த குழந்தை தானாகவே உணவை உட்கொள்ளும் வரையே...
ஆனால்,
மனிதன் ஆயுள் வரை அதைப்பிடித்துத் தொங்குகிறான்.
இயற்கை அதுவல்ல..."

மேலும்

தணல் தமிழ் - Palani Rajan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-May-2022 6:05 pm

நேரிசை வெண்பா


தந்தையை சொன்னவளென் அன்னை கடவுளையும்
எந்தை விளக்கத் தெரிந்தனன் --. தந்தையென்று
கண்டவனை சொல்லும் கயவன் கடவுளை
உண்டிலை கூறுவனோ சொல்

எவனையோ தந்தை யென்று அழைக்கும் கீழ் மகன்கள்
கடவுள் இருப்பதையும் இல்லாததையும் சொல்ல அவருக்கென்ன
தகுதி என்று யாராவது விளக்க முடியுமா? மலையை பார்த்து நாய்
குலைக்கிறது என்று விட்டு விடாதீர்கள். தூக்கத்தை கெடுக்கும் நாயை
எழுந்து வெளியில் வந்து கல்கொண்டு எறியுங்கள். ஓடி பதுங்கும்
பாருங்கள்

P.......

மேலும்

தணல் தமிழ் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-May-2022 7:26 pm

"நல்வழிக்கான பாதையே,
மதத்தின் கோட்பாடே,
அதில் விளைந்த சடங்கே,
கலவரமாக அடித்துக்கொள்ளும்
நிலை வரும் என்றால்,
ஆதியிலேயே தடுத்திருப்பேனே,
கடவுள் என்ற படைப்பையே."

மேலும்

தணல் தமிழ் - தணல் தமிழ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Feb-2022 3:09 pm

வனவிலங்கு பூங்காவிற்கு சென்றேன்
குரங்குகள் என்னைக் காணப்பிடிக்காமல்
முகத்தைத் திருப்பிக்கொண்டன,
கிளிகள், பருந்துகள் சத்தமிட்டன,
புலிகள் என் நிலைமையைப் பார் என்றது,
யானைகள் தனிமையில் புலம்பின,
மான்கள் ஓட வழியில்லாமல் விழித்தன,
அனைத்தும் ஓலமிட்டதாகவே உணர்தேன்.
சிறை எதற்கு என வினவின?
துணையில்லாமல் கதறின,
செயற்கை உணவால் துவண்டன,
அனைத்தும் துன்புறுவதாக உணர்தேன்.
ஒன்றின் முகத்திலும் புன்னகையில்லை.
யார் இதற்கு காரணம்?
நானா?
ஆம்.
நான் அங்கு சென்றுக்கக்கூடாது,
திரும்பினேன் வலியுடன்,
கையாலாவதத்தனத்தால் துடித்தேன்,
வலி இன்னும் தீர்த்தபாடில்லை.

மேலும்

நன்றி நண்பரே.. வாழ்த்துக்கள் 14-Feb-2022 10:52 am
உண்மை நண்பரே...அதனால்தான் விலங்குகள் காட்டை விட்டு நாட்டிற்குள் வந்து அழிவை ஏற்படுத்துகின்றன. எனக்கு ஓர் கற்பனை தோன்றியது. மனிதரை பிடித்து காட்டிற்குள் இப்படி ஒரு மனித பூங்கா அமைத்து மிருகங்கள் நம்மை பார்த்தால் எப்படி இருக்கும்? உங்கள் வலி என்னுள்ளும் இருக்கிறது.தொடருங்கள் தணல்... 13-Feb-2022 4:57 pm
தணல் தமிழ் - தணல் தமிழ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Feb-2022 3:09 pm

வனவிலங்கு பூங்காவிற்கு சென்றேன்
குரங்குகள் என்னைக் காணப்பிடிக்காமல்
முகத்தைத் திருப்பிக்கொண்டன,
கிளிகள், பருந்துகள் சத்தமிட்டன,
புலிகள் என் நிலைமையைப் பார் என்றது,
யானைகள் தனிமையில் புலம்பின,
மான்கள் ஓட வழியில்லாமல் விழித்தன,
அனைத்தும் ஓலமிட்டதாகவே உணர்தேன்.
சிறை எதற்கு என வினவின?
துணையில்லாமல் கதறின,
செயற்கை உணவால் துவண்டன,
அனைத்தும் துன்புறுவதாக உணர்தேன்.
ஒன்றின் முகத்திலும் புன்னகையில்லை.
யார் இதற்கு காரணம்?
நானா?
ஆம்.
நான் அங்கு சென்றுக்கக்கூடாது,
திரும்பினேன் வலியுடன்,
கையாலாவதத்தனத்தால் துடித்தேன்,
வலி இன்னும் தீர்த்தபாடில்லை.

மேலும்

நன்றி நண்பரே.. வாழ்த்துக்கள் 14-Feb-2022 10:52 am
உண்மை நண்பரே...அதனால்தான் விலங்குகள் காட்டை விட்டு நாட்டிற்குள் வந்து அழிவை ஏற்படுத்துகின்றன. எனக்கு ஓர் கற்பனை தோன்றியது. மனிதரை பிடித்து காட்டிற்குள் இப்படி ஒரு மனித பூங்கா அமைத்து மிருகங்கள் நம்மை பார்த்தால் எப்படி இருக்கும்? உங்கள் வலி என்னுள்ளும் இருக்கிறது.தொடருங்கள் தணல்... 13-Feb-2022 4:57 pm
தணல் தமிழ் - தணல் தமிழ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Feb-2022 1:42 pm

இளமையின் மயக்கத்தில் காதலித்தேன்
அவளைச் சேர்ந்துவிட்டதாக கனவுகண்டேன்
கற்பனையிலேயே காலத்தைக் கழித்தேன்
ஒருநாள் நடப்பில் வாழ ஆசைக்கொண்டேன்
அவளை அழைத்து பேசினேன்
அப்போதுதான் தெரிந்தது
அவளுக்கும் எனக்கும் ஓராயிரம் வேறுபாடு
போதுமடா என்று கண்விழித்து
காற்றும் மழையும் கடும்வெயிலும்
உடலில்பட உணர்வுடன் வாழ தொடங்கினேன்.

மேலும்

இந்த தளத்தில் படித்தவர்களுக்கு இருக்கிறார்கள். எதையும் தெரிந்து கொள்ளாமல் சரித்திரம் பேசவேண்டாம். நீங்கள் சொல்வது உலகில் இல்லாத திராவிடர் சொன்ன கத்த்து சரித்திரம் இல்லை. கண்டதை கழக முட்டாள்கள் என்பது வருடமாக சொன்ன புளித்துப்போன கருத்து தான் உமது கருத்து கருத்தும். "" பின்பு, மன்னர்களை, பார்ப்பனர்கள் கையில் போட்டுக்கொண்டார்கள். கடவுள் பற்றி கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டனர். தமிழர்கள் கடவுளிடம் தங்கள் குறைகளைக் கூறினார். குழந்தை பொம்மையிடம் பேசுவது போல, பார்ப்பனர்கள் உங்கள் மொழியில் சொன்னால், கடவுளுக்கு காது கேட்க்காது. எங்கள் மொழியில் சொன்னால் தான் கேட்கும் என்று தப்பு தப்பாக சொல்லி வைத்தார்கள். ஆனால் பார்ப்பானின் பண்பாட்டில் கடவுளுக்கு உருவம் கிடையாது. மன்னர்கள் என்ன பைத்தியங்களா ? பாப்பன் சொன்னதை கேட்ட மன்னர் என்பது எந்த சரித்திரம் சொல்கிறது. நீங்கள் உடனடியாக திராவிடர் கழகத்தில் சேர்ந்தால் வீரமணி மாத மாதம் பண முடிப்பு தருவார். பாருங்கள். இதென்ன கட்சி பிரச்சாரத் தளமா என்ன ? முடிந்தால் இலக்கணமாக இரண்டு பாட்டை கற்று எழுங்கள். பாராட்டலாம் மன்னர்ககளை பழிக்க உமக்குத் தகுதி கிடையாது. சரியா ஆதாரம் காட்டி பேசவேண்டும். 17-May-2022 9:04 pm
தணல் அவர்களே...எதார்த்த கவியா நீங்கள்? தொடருங்கள் 13-Feb-2022 5:03 pm
தணல் தமிழ் - தணல் தமிழ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Feb-2022 1:51 pm

கருப்பு பணம் வெள்ளையானது
கடனுதவி பணமாக
கைபேசியில் வருகிறது செய்தி
உங்களுக்கு கடன் வேண்டுமா?
எவண்டா பணத்தை வைத்துக்கொண்டு
கடன் கொடுப்பவன்
வாங்கும் கூலி
வயிற்றுக்கும் வாயிக்குமே
சரியாகும் போது
உங்களுக்கு ஏதடா பணம்
கருப்பு வெள்ளையாக
நான் கடன் வாங்கவேண்டுமா?

மேலும்

எதார்த்தமான உண்மை...வடைக்காய் தன உயிரையே பணயம் வைக்கும் எலிகள்தான்..பணமில்லாதவர்கள். நன்று 13-Feb-2022 5:00 pm
மேலும்...
கருத்துகள்

மேலே