Antony - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Antony |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 16-Mar-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 33 |
புள்ளி | : 2 |
தமிழ் மொழிக் காதலன்.....
வருகை பதிவிலிருந்து இனி ஒரு அழைப்புகள் இல்லை....
தொல்லை செய்ய செல்லத் தோழன் ஒருவனும் இல்லை....
துவளும் பொழுது தோள்கள் சுமக்கும் தாயுள்ளமும் இனி இல்லை....
காதலர்களின் சேட்டைகளை வகுப்பறைகளின் வாசல்கள் சொல்லும்...
எழுத படாமலிருந்த வெள்ளை தாளில் இன்று எண்ணற்ற உறவுகள் நட்பெனும் பெயர் கொண்டு...
நான்கு வருட கருவிலிருந்து வெளி வந்த குழந்தை நான்..
அழுகையை தவிர வேறொன்றும் தெரியவில்லை...
விதிகளுக்கு பேர் இழப்பு யாதின் ,
சிறந்த நட்பை பிரிப்பது....
சிக்கன சிலுவை கொண்டு சுமக்கிறேன்,
நி (...)
விழியை தொலைத்தேன் உன்னில் நானோ....
உன் விரல்கள் என்னை கொல்வதும் ஏனோ...?
இதய போரில் என்னை கொன்றாய்...
உன் இதழின் போரில் என்னை வென்றாய்...
நீ வந்து என்னை கொஞ்சம் நனைத்து போக...
ஏழு வண்ண வில்லை கண்டென் நமக்கு இடையில் .....
ஆழமும் இல்லை ,
அலைகளும் இல்லை ...
கரைகளும் இல்லை ,
கலங்கரைகளும் இல்லை ...
நீண்ட நேர நீச்சல் மட்டும் அதனுள் ...
நீந்துவதர்க்கு சுவாசம் தந்த என் தாயிற்கு நன்றிகள் ...
நீந்திய கடல் ,
என் தாயின் கருவறை ...
- அந்தோனி ஜெயராஜ்
ஆழமும் இல்லை ,
அலைகளும் இல்லை ...
கரைகளும் இல்லை ,
கலங்கரைகளும் இல்லை ...
நீண்ட நேர நீச்சல் மட்டும் அதனுள் ...
நீந்துவதர்க்கு சுவாசம் தந்த என் தாயிற்கு நன்றிகள் ...
நீந்திய கடல் ,
என் தாயின் கருவறை ...
- அந்தோனி ஜெயராஜ்
''மெல்லத் தமிழ் இனி''
அரம்பை போன்று வாழ்ந்த மொழி
இன்று அவலம் கண்டு போனதே !
குலவாடிய பேச்சுக்கள், குரலற்று போனதே !
குழவிக்கல் கொண்டு குவலயம் சிதைந்ததோ ?
கூற்றுவனின் அரைக்கூவல்,
கூப்பாடு போட்டிட,
மார்புடைத்த தமிழ் மொழிக்கு,
கெக்கிலியோ கவுரவம்?
தேம்பாவாணிப் பாட்டுகள் ,
தேய்ப்பிறையாய் போகிடுதே,
என்று தேம்பியவருள் நானும் ஒருவன்....
தணல் கொண்ட தமிழ் வார்த்தைகள்
தண்டனை பெற்று தவிக்கிறததே !
தமிழியல் படித்தவன் தரை அடியில் தவிக்கிறான்,
தர்க்கு கொண்டு வந்தவன்
தரை ஆள துடிக்கிறான் ,
சுரங்கத்தில் மறைந்த கரை ஓவியமாய் போனது ,
எம் தமிழ்மொழியின் தலைக்கவசம்...