makesh anand - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : makesh anand |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 10-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 40 |
புள்ளி | : 0 |
காதலென்னும் தோட்டத்திலே
கை கோர்த்து நடந்தவளே ..!
வண்ண நிற வானத்தில்
வான்மதியாய் வலம் வந்தவளே..!
கறைபடியா உயர் கற்போடு
காதல் கவி வடித்தவளே...!
கடலலைபோல் என் கால்களை
கடைசியில் தொட்டு மறைந்தவளே...!
சாதி மதத்தின் உருசொல்லி
சாட்டாம் பிள்ளை உறவுகளும்..!
சாவை சொன்ன தாய்மடியில்
சரிந்து அங்கே தோற்றவளே..!
அப்பா போட்ட ஆணையிலே
தப்பாது எனை தொலைத்தவளே ...!
காதலை முழுகி என்சிந்தையிலே
கனவு வாழ்க்கை கலைத்தவளே..!
அக்னி சாட்சியின் முன்னாலே
அழகு மாலை போட்டவளே..!
தட புடலாய் தாரமாகி
தாரை வார்த்து சென்றவளே..!
கைபிடித்த உன் மன்னவனும்
கைம்பெண்ணாக்கி சென்றானே..!
காலம் ஆண்
காற்றே...
உன் வருகைக் கண்டு
மரக்கிளைகள் நடனமாடும்...!
தனை மறந்து
செடிக்கொடிகளெல்லாம்
நயமாய் தலையாட்டும்...!
புல்லாங்குழலுக்கு
நீதானே
புதுக்கவிதை...!
குழந்தைகள் கையில்
கொஞ்சி விளையாடும்
பலூனும் நீதான்...!
வெற்றுத்தாளையும்
வானுயரப் பறக்கும் பட்டமாய்
மாற்றுவதும் நீதான்..!
சிமிலிக்குள்ளே
ஒளிந்திருக்கும்
முரட்டுக்கார நெருப்புக்கூட
உன்னைக் கண்டு நடுநடுங்கும்...!
நீயின்றி ஏது
மின்சாரம்...?
நீதானே அதற்கு
சம்சாரம்...!
காதலர்கள் மயக்கம்கொள்ள
அழகிய தென்றலாய் வருவாய்...
கட்டுக்கடங்கா வீரன் நீயென்று
உலகெல்லாம் பறைசாற்றிட
புயலாக நீ அவதரிப்பாய்...!
உன் மார்பில் மு
மண்ணை நாம் மதிக்கவில்லை..
=== செயற்கை உரத்தால் தொலைத்தோம்..!
மலைகளை நாம் விடவில்லை....
=== வெடிகள் வைத்து பொடித்தோம்..!
மரங்களை நாம் பார்க்கவில்லை...
=== மதி தொலைத்து முறித்தோம்..!
கடலை நாம் காணவில்லை...
=== விஷ கழிவை கலந்தோம்..!
சுவாசிக்கும் காற்றை நாம்..
=== சுற்றி சுற்றி புகைத்தோம்..!
வானத்தை நாம் ரசிக்கவில்லை...
=== பெரும் ஓட்டை போட்டோம்..!
பூமியின் கோபம் பூகம்பமாய்...
மலையின் கோபம் மண்சரிவாய்..
மரத்தின் கோபம் மழையின்மையாய்
கடலின் கோபம் சுனாமியாய்..
காற்றின் கோபம் கடும் புயலாய்..
வானத்தின் கோபம் வெப்பமாய்..
மனிதா மனதில் குறித்துக்கொள்....
சுற்றும் சூரியன் நடுப்பகல் ந
அன்று..
ஆரம்ப பள்ளியில் உன்னைவிட்டு
அழுகையோடு நீ என்னைத்தொட்டு
சினத்தோடு நானும் கையை விட்டு
சிந்திவிட்டு வந்தேன் தள்ளி விட்டு..!
இன்று..
பொறுப்பை போக்கி இல்லமொன்றில்
பொறுப்பாய் எனை நீ விட்டபோது
பொங்கும் என் மன குமுறல் விட்டு
போனாயே என் செல்ல மகனே..!
ஆரம்ப இல்லத்தில் உனை விட்டதற்க்கு
அநாதையாக எனை போட்டு விட்டாய்..!
அன்று..
உன் கல்விக்காய் நல்பள்ளியை நாடினேன்
உன் கல்விதரம் சிறக்க அலைந்து தேடினேன்
முன் குறை கண்டு உன்னோடு சாடினேன்
முதல்தரத்தில் வெல்ல ஆனந்தம் பாடினேன்..!!
இன்று..
என் சுமை இறக்க பலநாள் அலைந்தாயே
என் தரத்துக்கு அக்கறையாய் சுழன்றாயே