ponshankar sundararajan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ponshankar sundararajan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 31-Jul-2016 |
பார்த்தவர்கள் | : 15 |
புள்ளி | : 0 |
தென்பாண்டி முத்தெடுத்து சேர்த்து
வெச்ச தேகத்துல - நான்
கோத்து வெச்ச மாலை போட
நேரம் இப்போ வந்ததடி !!
நேத்து உன்ன பாத்த போது - இப்படி
நினைக்கலையே உன்னை நானும் !
சமைஞ்ச போது என்ன செஞ்ச
எனக்குள்ள வந்து நீயும் !!
மஞ்சள் முகம் நீ காட்டி
என்ன வெச்சுப்புட்ட மயக்கத்துல !
நான் செஞ்சு வந்த ஓலைக்குச்சி
கிடக்குதடி கிறக்கத்துல !!
குச்சிக்குள்ள நீயிருக்க - உச்சி
வெயில்ல நான் கெடக்க !
உன்ன கொண்ட மனசு மட்டும்
குச்சி ஐசா உருகுதடி !!
விதவிதமா சீர் செஞ்சு வந்த
என்னை தள்ளிவிட்டு
வெறும் நகத்தை கடிக்கிறியே
என்ன சொல்ல பாதகத்தி !!
பூவால சோடிச்சு புதுப்பொ
அசையாதே கிடந்ததன் பயனாம்
ஆண்டு பலகழிந்ததில் பிறந்ததாம்
தெய்வ மண்ணின் முற்பிறப்பாம்
பெயரோ கல்லாம், பாறையாம்.
வல்லவன் ஒருநாள் வந்தானாம்
இளைத்தவன் அவன்முன் பணிந்தானாம்
வல்லவன் தன்புகழ் நிலைநிறுத்த
பார்மிசை பல்பணி புரிந்தானாம்.
முதற்கட்டப் பணியில் எடுத்தானாம்
மண்கொண்டு செய்த செங்கல்லில்
தன்வலி காட்டத் திட்டமிட்டே
திருக்கோபுரத்தோடு பல கோயில்.
சிலநூறாண்டில் செங்கற்கோயில் வலுவிழந்ததாம்
காலத்தோடு போட்டியிட்டே பொழிவிழந்ததாம்
வல்லவன் ஒருவன் பார்த்தானாம்
கருங்கற்கொண்டே கோயில் செய்தானாம்.
- செ.கிரி பாரதி.