வளர்மதி சிவகுமாரன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வளர்மதி சிவகுமாரன்
இடம்
பிறந்த தேதி :  19-Sep-1975
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  25-May-2015
பார்த்தவர்கள்:  60
புள்ளி:  9

என் படைப்புகள்
வளர்மதி சிவகுமாரன் செய்திகள்
வளர்மதி சிவகுமாரன் - வளர்மதி சிவகுமாரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jul-2015 5:58 pm

பட்டறிவு


எல்லையை மீறி வந்து
தொல்லையே தந்ததாய்
துள்ளி வந்த எதிர் வீட்டுக் கன்றுக்கு
கட்டி வைத்து அடி போட்டவர் ..........
கொக்கரக்கோ கூவலோடு
கொண்டையாட்டி வந்த
அடுத்த தெருச் சேவலை
மடக்கியமுக்கி கறியாக்கி மகிழ்ந்தவர் .......
கணுக்காளளவு தூரம்
தன் காணிக்குள் வளர்ந்ததென
மரக்கிளைகள் அறுத்து
அயல்மனை மீது அடங்காக்கோபம் கொண்டவர் .........
ஏழ்மை தூதனுப்ப
வேலிக்குள் எட்டி நின்றே
கஞ்சிக்கரிசி கேட்டவரை
எள்ளி நகையாடி மகிழ்ந்தவர்..........
நன்னீர்க் கிணறென
நாலு மைல் தொலைவிலிருந்து
நாரியில் குடம் சுமந்து வந்தவர்க்கு
நுழைவாயில் பூட்டி ஏமாற்றி மகிழ்ந்தவர் .........

மேலும்

நன்றி சகோ ஜின்னா 02-Aug-2015 11:57 pm
நல்ல அறிவுரை கவிதை.. சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 16-Jul-2015 2:50 am
வளர்மதி சிவகுமாரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jul-2015 5:58 pm

பட்டறிவு


எல்லையை மீறி வந்து
தொல்லையே தந்ததாய்
துள்ளி வந்த எதிர் வீட்டுக் கன்றுக்கு
கட்டி வைத்து அடி போட்டவர் ..........
கொக்கரக்கோ கூவலோடு
கொண்டையாட்டி வந்த
அடுத்த தெருச் சேவலை
மடக்கியமுக்கி கறியாக்கி மகிழ்ந்தவர் .......
கணுக்காளளவு தூரம்
தன் காணிக்குள் வளர்ந்ததென
மரக்கிளைகள் அறுத்து
அயல்மனை மீது அடங்காக்கோபம் கொண்டவர் .........
ஏழ்மை தூதனுப்ப
வேலிக்குள் எட்டி நின்றே
கஞ்சிக்கரிசி கேட்டவரை
எள்ளி நகையாடி மகிழ்ந்தவர்..........
நன்னீர்க் கிணறென
நாலு மைல் தொலைவிலிருந்து
நாரியில் குடம் சுமந்து வந்தவர்க்கு
நுழைவாயில் பூட்டி ஏமாற்றி மகிழ்ந்தவர் .........

மேலும்

நன்றி சகோ ஜின்னா 02-Aug-2015 11:57 pm
நல்ல அறிவுரை கவிதை.. சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 16-Jul-2015 2:50 am
வளர்மதி சிவகுமாரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jul-2015 2:50 pm

சங்கடச் சந்திப்பில்.........
எதிர்பாராச் சந்திப்பில்
சங்கடத்தை கூடவேயழைத்து
நலம் விசாரிப்பவளின்
இளக்காரப் பார்வை விலக்கி
அகன்றிருந்த தனங்கள் தாண்டி
புடவை மூடிய மேட்டுப் பகுதியில்
குத்திட்ட விழிகளுக்கு
புத்திமதி சொல்கிறது
அடிக்கடி அடி வாங்கி
காயப்பட்ட அலுமினியப் பாத்திர மனம்
ஆறைந்து அகவைகளாகியும்
அடி வயிறு திறக்காத
மலடியின் கொள்ளிக்கண் பட்டு
மகவுக்கேதுமாகி விடுமோவென
எதிராளி எண்ணுவதாகவே ...........

மேலும்

வளர்மதி சிவகுமாரன் - கட்டாரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jun-2015 6:47 am

முகத்திலிருந்து உதிர்ந்தவனுக்கு
உடல் வளர்ந்திட்ட
நிகழ்வுகளைப் போலல்லாது.....

கைகளிலிருந்து பிறந்தவனுக்கோ
முதுகு பிட்டம்
முளைத்த அபூர்வங்களைப்
போலல்லாது ...

தொடையிலிருந்து தவழ்ந்தவனின்
தலை ஓங்கி
உயர்ந்த மாற்றங்களைப்
போலல்லாது...

கால்களிலிருந்து உருண்டவனின்
இன்னபிற பல்கிய
பரிணாமங்களைப்
போலல்லாது...

இந்தக் கிறுக்கல்களையும்
கவிதையெனச் சொல்லும்
வரலாறுப் பிழை நிகழ்வுகள்
அப்படியே
கடந்து போய் விடட்டும்.......

மேலும்

என்ன சொல்றதுன்னு தெரியலை நண்பா..... !! நெல்லு போட்டா நெல்லு முளைக்கும்... புல்லு போட்டா புல்லு மொளைக்கும் ன்னு தாத்தா சொல்வாங்க..... இதுல நெல்லு போட்டா புல்லு மொளைக்குது... புல்லு போட்டா பொடலங்கா நீளுது.. என்ன மாயமோ மந்திரமோ தெரியலை.. அவ்வவ்... வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி நண்பா 26-Jun-2015 6:55 am
சில வாழ்க்கை பிழைகளை - இந்த வரலாற்று பிழைகள் சொல்லி விட்டு போகிறது... மானுடம் எந்த திசையில் பரிணமிக்க வேண்டுமென்று யார் முடிவு செய்ய என யோசிக்க தெரியாத சமூகத்தின் கடைசி உயிரின் ஒரு துளி இந்த கவிதைய வாசித்து விட்டு போகட்டும் வாழ்வின் அடுத்த பக்கத்தை புரட்டி போடுகிறது வரிகளும் அதன் பொருள்களும்... மிக அருமை தோழரே.. இந்த கவிதை வாசித்து பொருள் புரிந்து கொண்டேன் என்பதே எனக்கு பெருமையாக இருக்கிறது... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 25-Jun-2015 11:31 pm
புரிதலுக்கு நன்றி தோழரே 25-Jun-2015 7:32 pm
வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி தோழமையே 25-Jun-2015 7:32 pm
வளர்மதி சிவகுமாரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jun-2015 7:19 pm

பேரூந்தின் நெரிசலுக்குள்
முட்டி மோதி மூச்சுத் திணறி
முன்னே நகர்ந்திட இடைவெளி தேடி
ஜனப்பெருக்கத்தை எண்ணி
மனதுக்குள் நொந்து
மறுபடி நகர எத்தனித்தேன்

இப்போது .என் மனம் ஆற்றாமையில் ,.................

சலிப்புற்ற விழிகளில்
துழாவிய கணங்களில்
ஆடவன் அருகில் நிற்க
இருக்கையில் ஓரழகிய தேவதை
பளிச்செனத் தெரிந்தாள்

இப்போது என் மனம் ஆச்சரியத்தில் ..................

எதிரமர்ந்த
தாயமடி மழலையை
சீண்டி மகிழ்வித்து
ரசித்துக் கொண்டிருந்தாள்
அவர்களின் சிரிப்பலை
எனக்குள்ளும் வீசியது

இப்போது என் மனம் மகிழ்ச்சியில் ......................

அந்தோ!
முதுகு வளைந்த மூ

மேலும்

வளர்மதி சிவகுமாரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jun-2015 7:01 pm

அரிதாரம் பூசி
ஆபரணங்களால்
மேனி போர்த்திய
ஆரணங்கு
நானவளை
உற்றுப்பார்த்ததாக
குற்றப்பத்திரிகை
வாசித்தாள்.
கோப நாணேற்றி
வேகமாய் வீசினாள்
கேள்விக்கணைகளை !

அதிர்ந்தேன்
திடீர்த் தாக்குதலால்
விழித்தேன்
விழிக்கதவுகள் திறந்து
விசையுடன் இழுத்தேன்.
பழிச்சொல் இதுவென
வார்த்தைகளை நானும் .

இரசித்தேன்
நிஜமெதுவெனில்
அவளிடையினில்
"ஒட்டி"யாணத்தில்
பட்டுத் தெறித்த
கதிரவனின்
பொன்னொளிக் கதிர்களை
நன்கு ரசித்தேன்.

நினைத்தேன்
நுதலில் தனித்து
சுருட்டி விடப்பட்ட
சிகை அலங்காரத்துக்கு
செலவிடப்பட்டது
எத்தனை நிமிடங்களோ
என நினைத்தேன். .

நுகர்ந

மேலும்

அருமை அருமை !!! 08-Jun-2015 7:16 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
கட்டாரி

கட்டாரி

பட்டுக்கோட்டை.

இவர் பின்தொடர்பவர்கள் (4)

கட்டாரி

கட்டாரி

பட்டுக்கோட்டை.
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவரை பின்தொடர்பவர்கள் (4)

கட்டாரி

கட்டாரி

பட்டுக்கோட்டை.

என் படங்கள் (5)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே