எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அம்மா வென்று அழைத்து
பதினஞ்சு வருஷமாகுது...!

விளையாட்டு பருவத்தில்
தாயை இழந்ததால்
தெரியாமல் போன
தாயருமை...!

காலச் சக்கரம் உருளலில்
தாயில்லா நிலை
ஊசியாய் குத்துகிறது!

என்றாவது! யாரோட
வீட்டிலாயாவது
தாய் பாசம் மிளிரும் காட்சிகள்!
விழியோரத்தை ஈரமாக்கும்!

குடும்பத்தில் கடைசியாக
சாப்பிடும் அம்மாவின்
கடைசி கவளம்! இந்த
கடைகுட்டிக்குதான் சொந்தம்!

இன்னும் எத்தனையோ
விலைமதிப்பிலா காட்சிகள்!
நிழலாடுகிறது! இன்றும்!

அம்மாவின் நினைவுகளோடு...

மேலும்

நெஞ்சை நெகிழ வைக்கிறது ! அருமையான படைப்பு ! தொடருங்கள் தோழரே ! 11-May-2015 10:58 am
நெகிழ்வு தோழா .முதியோர் இல்லம் அல்லது சாலையில் நீங்கள் சந்திக்கும் உங்கள் அறிமுகம் இல்லாத தாய் ஒருவருக்கு இன்னாளில் அல்லது உங்க்ச்ள் பிறந்த நாளில் ஒரு வேளை உணவளியுங்கள் _உங்கள் இறுதி நாள் வரை .போதும் 10-May-2015 10:07 pm
நன்றி சஹோ..... 10-May-2015 7:05 pm
அருமை, நெகிழ்வு... 10-May-2015 5:59 pm

மேலே