எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
அனைவர்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . . . .
* நாம் நம்மைப் பற்றி எண்ணாத நேரத்தில் மட்டுமே உண்மையான வாழ்க்கையை அனுபவிக்கிறோம்.
* ஆற்றல் மிக்க மனிதர்கள் தங்களுக்குஉரிய விதியை தாங்களே வகுத்துக் கொள்கிறார்கள்.
* சுதந்திரமான நிலையில் மட்டுமே அன்பு முழு அளவில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்.
* எந்தப் பணியில் ஈடுபட்டாலும், அதை உயர்ந்த வழிபாடாக எண்ணிச் செய்யுங்கள்.
* அன்பும், வெறுப்பும் புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் வந்து சேரும் ஆற்றல் படைத்தவை.
- விவேகானந்தர்
இனிய மாலை வணக்கம் .............
* இரவு பகலாகிறது. பகல் இரவாகிறது. இரண்டையுமே திறந்த மனதுடன் பாராட்டுங்கள்.
* தன் குறையை அறியத் தொடங்கி விட்டால், மற்றவர்களைப் பற்றிய பேச்சுக்கே நேரம் இருக்காது.
* யாரையும் விரோதியாக கருதாதீர்கள். ஏனென்றால் பகையுணர்வால் தீமை மட்டுமே விளைகிறது.
* பகைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினால் அன்பு செலுத்துவது ஒன்றே சரியான தீர்வு.
* உணர்வுடன் இருங்கள். அதே சமயத்தில் உணர்வில் இருந்து விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்.
- புத்தர்
இனிய மாலை வணக்கம் நண்பர்களே ...........
* புனிதமான எண்ணங்களையே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருங்கள்.
* பிரதிபலன் கருதாமல் பிறருக்குச் செய்யும் நற்செயல்கள், முன்வினை என்னும் கர்மச்சங்கிலியை உடைத்தெறிகிறது.
* வாழ்வு ஒருநாள் முடியத் தான் போகிறது. லட்சியத்திற்காக வாழ்ந்து மடிவது மேலானது.
* மனிதர்கள் கடவுளின் குழந்தைகள். அவர்களுக்குத் தொண்டு செய்பவன் கடவுளுக்கே தொண்டு செய்யும் பாக்கியத்தை பெறுகிறான்.
* ஒரு அடி கூட பின்வாங்க வேண்டாம். துணிந்து போராடுங்கள். மனத்தளர்வுக்கு இடம் தருவது கூடாது.
- விவேகானந்தர்
அனைவர்க்கும் இனிய மாலை வணக்கம் .......
எழுத
எனக்கு ஆசை
ஆனால் ,
பலருக்கு ஆசை இல்லை
அதை படிக்க . . . !!!!