Sangeethadamodharan- கருத்துகள்

திரு.செந்தில்குமார் அவர்களுக்கு என் உளங்கனிந்த நன்றி

என்றும் கொண்டாடுவோம் மகளிரை!
மலரின் மறுபிறப்பை அவதரித்து,
மணப்பெண்ணாய் அடிவைக்கும் போது
மாமன், மாமி, நாத்தி மனமறிந்து, கட்டிய
மணவாளன் தேவை அறிந்து, பெற்ற
மழலையின் நலனை முன்னிறுத்தி, அது
மயக்கும் புன்சிரிப்பில் மதி மயங்கி
மக்கட் நலன் ஒன்றே பெரும் பணியாய்
மாதந்தோறும் இடைவிடாது
மணக்கும் மலரன்றோ பெண்...! இதில்
மார்ச் எட்டு மட்டும் என்ன சிறப்பு!
மண்ணுலகில் பெண்ணை படைத்திட்ட பிறகு
மாளவனும், பிரம்மனும் கூட தன்
மஞ்சத்தில் நிம்மதியை உறங்குகிறானே! அம்மேதகு
மகளிருக்கு வருடத்தில் ஒரு நாள் என்ன
மண்ணுலகம் இறங்கும் வரை
மறவாது கொண்டாடுவோம் மகளிர் தினம்...!

அடுக்களையில் ஜடமாய்,
அடங்கி கிடந்த பெண்மக்கள்
ஆடவர் இச்சைக்கு
ஆட்பட்டு பிள்ளை பெற்றால் ஒன்றே,
அனைத்திலும் சிறந்த பனி என
அறிவுறுத்தப்பட்டு மற்ற ஏதும்
அறிந்து கொள்ள கூடாது என் ஒடுக்கப்பட்டு, தன்
அடிவயிற்றில் சுமந்து பிரசவிக்கும் கருக்கூட
ஆண் மகவாய் இருந்தால்தான் மதிப்பு என்ற
அற்ப நிலைக்கு தள்ளப்பட்டு, சமூகத்தில்
அடிமைகளாய் கிடத்தப்பட்டு
அன்றாடம் மெழுகாய் உருகி தவித்த மகளீர், இன்று
அற்புத சாதனைகள் பல புரிந்து,
அகிலத்தின் இருள் போக்க விழைந்து
அண்டம் வியக்க செயல்பட்டு
அமைதியை உலாவரும்
அற்புத இராகம் அன்றோ மகளீர்!
அனைத்தும் அமைய பெற்றிருப்பினும் ஏனோ
அடிமனதில் ஓர் சஞ்சலம்! இது
அகில மகளிருக்கும் ஏற்பட்ட சாபமோ
அல்லது இந்திய மகளிருக்கு ஏற்பட்ட சாபமோ தெரியவில்லை!

இல்லற பந்தம் என்று வரும் போது
இன்றும் பல மகளிர் இன்னலுக்கு ஆட்படுத்தப்படுவது
இச்சமூக அமைப்பில் இருந்து வரும் மாபெரும் அவலமன்றோ...!
இல்லறம் என்பது நல்லறமாய் திகழ,
இனிய மனையாளின் உரணவு புரிந்து,
இருவரும் ஒரு சேர்ந்து கரம் கோர்த்து
இவள் நம்மில் பத்தி என்றும், வரும்,
இன்பம், துன்பம் எல்லாம்
இருவருக்கும் தான் என உணர்ந்து, ஆண் மக்கள் தன்
இதய கதவை சற்று விசாலமாக்கி
இல்லாளை அதில் குடிவைத்தால்
இல்லறத்தின் அழகு , இமயம் வரை உயர்வதோடு,
இம்மக்களின் தின கொண்டாட்டத்திற்கும் ஓர்
இன்றியமையா இடம் கிடைக்கும் என்பதில்
எள்ளளவும் எனக்கு ஐயமில்லை...!
வாழ்க பாரதம் பல்லாண்டு...! அதில் ஒளியாய் , வீசட்டும் மகளிரின் இன்றியமையா தொண்டு....!

இவண்
சங்கீதாதாமோதரன்


Sangeethadamodharan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே