கருவறையைக் கல்லறையாக்கிவிட்டுக் கல்லறையை கருவிலே சுமந்தாயோ ! தாய்...
கருவறையைக் கல்லறையாக்கிவிட்டுக்
கல்லறையை கருவிலே சுமந்தாயோ !
தாய் என்ற சொல்லை உருவாக்கிய எங்களை
வாழவிடாமல் அழிப்பது நியாயமா ?
வாழும் மனிதர்கள் உருப்படியில்லை
வாழ நினைக்கும் நாங்களோ கல்லறையில் !
தாய்ப்பால் கொடுக்க மறந்து
கள்ளிப்பால் கொடுத்தாயோ -என்னை மறைக்க
பூக்கள்கூட மலர்ந்தபின் தான் வாடும் -ஆனால்.
மனிதர்களோ தாய்மையை மறைக்கிறார்களே -ஏன் ?
நாங்கள் பிறப்பது பிடிக்கவில்லை என்றால்
நீங்கள் ஏன் பிறக்க வேண்டும் !
-கருகும் மொட்டுக்கள்
கடவுளின் சொத்துக்கள் !