எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நெஞ்சங்களின் வாழ்த்துக்கள் இடைவிடாமல் இசைத்துக்கொண்டிருக்கும் இனிய திருநாளில் .....

நெஞ்சங்களின் வாழ்த்துக்கள்
இடைவிடாமல் இசைத்துக்கொண்டிருக்கும்
இனிய திருநாளில் ..
பூக்களின் உதவி தேடாமல்
வார்த்தைகளின் உதவி நாடியே
நானுமொரு வாழ்த்துரைக்க வந்துள்ளேன் ...
வண்ணங்கள் வீசியே
வந்ததொரு நாள்
சத்தங்கள் நீட்டியே
நரகாசூரன் வதைக்கப்பட்ட நாள்
குயிலும், மயிலும்
சிங்காரச்சோலையும்
சிற்றின்பம் காணும்
தீபத்திருநாளாம் தீபாவளித்திருநாளில் ,
எண்ணங்கள் உயிர்ப்பித்து
ஏற்றத்தாழ்வுகள் முறியடித்து
வளமான தேசத்தை
உருவாக்கும் முயற்சியில்
பாதைகள் மாற்றியே
புதியதொரு பொன்னாளாய்
புகையில்லா நன்னாளாய்
புன்னகையோடு கொண்டாட
இயற்கையோடு நானும் விரும்பியே
வாழ்த்துகிறேன் ...
அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் ... ...




பதிவு : சுமித்ரா
நாள் : 21-Oct-14, 9:00 pm

மேலே