எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

------------------------- கவிதைகளுக்கு ------ நிதானமாக குடிக்கத் தெரியவில்லை. அவசரப்படாமல்...

------------------------- கவிதைகளுக்கு ------

நிதானமாக குடிக்கத்
தெரியவில்லை.

அவசரப்படாமல்
அனுபவிக்கத் தெரியவில்லை.

வேண்டியது கேட்டுச்
சாப்பிடத்தெரியவில்லை.

வேண்டாம் என்பதைச்
சொல்லத்தெரியவில்லை.

சத்தம் போடாமல்
பேசத்தெரியவில்லை.

அவசியத்துக்குக் கூடக்
கோவப்படத் தெரியவில்லை.

பயப்படாமல்
இரண்டாம் மனுஷியை
சினேகிக்கத் தெரியவில்லை.

ஹரிக்கேன் லைட்டைப்
பொருத்தத் தெரியவில்லை.

அடைகிற குருவிகளைப்
பார்க்கத் தெரியவில்லை.

அபிப்பிராயங்களைச்
சொல்லத் தெரியவில்லை.

வாழ்வும் கவிதையும்
தெரியும் என்ற
வாய்ச்சவடாலில் மட்டும்
குறைச்சலே இல்லை

- கல்யாண் ஜி ( வண்ண தாசன் )

நாள் : 16-Mar-15, 6:05 pm

மேலே