அம்மானு சொல்ல சொல்ல அம்மானு சொல்ல சொல்ல எத்தன...
அம்மானு சொல்ல சொல்ல
அம்மானு சொல்ல சொல்ல
எத்தன சொகம் நெஞ்சுக்குள்ள..!
அம்மா ஒன்ன பத்தி நான் சொல்ல,
கடலளவு வார்த்தை கூட பத்த வில்லை...!
என்னத்த நான் சொல்ல,
சுத்துதே உன் அன்பு முகம் என் கண்ணுக்குள்ள...!
அன்பா நீ, பேசிய வார்த்தையெல்லாம்,
இனிக்கிதே என் காதுக்குள்ள...!
பசிக்குதுன்னு நான் சொன்னா, பத்து பானை சோறு
ஆக்கி வைப்ப...!
பசிக்கலன்னு நான் படுத்தா., பட்னியா நீயும் இருந்துருவ..!
என் ஒடம்புக்கு நோவு வந்தா,
ஒன் நித்திரையை வெல குடுப்ப..!
தலை சாஞ்சி நான் சிரிச்சா,
முத்தமழை பொழிஞ்சி நிப்ப..!
அம்மானு நான் அழுதா,
அன்பு மழை பொழிஞ்சி நிப்ப..!
அரளி மனசை கூட அன்பால,
மாத்தி வைப்ப...!
ஒன்னாட்டம் அன்பு காட்ட ஒலகத்துல யாரும் இல்ல..!
ஒன்ன பத்தி கவியெழுத கம்பனுக்கும் வழி இல்ல...!! smile emoticon
-என் கவிதை நான் வரைந்த ஓவியத்துடன்..