எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

28.10.15 ஆனந்தவிகடனில் ராம்வசந்த் மற்றும் எனது கவிதை ஒரே...

28.10.15 ஆனந்தவிகடனில் ராம்வசந்த் மற்றும் எனது கவிதை ஒரே பக்கத்தில். 

பூம்பாவாய்




பூம்பூம் மாடு வாசலில் நிற்கிறது.



அதன் அலங்கார உடை கண்டு



அறியாதார் அதிசயிப்பர்.



கொம்புகளின் கூர்மை



குத்திக் கிழிக்குமோ என்று



குழந்தைகள் அஞ்சும்.



பூம்பூம் மாட்டுக்காரன் வந்துவிட்டால்



செய்கிற வேலையை விட்டுவிட்டு



ஓடிவந்து பத்து ரூபாய் கொடுப்பாள்.



நான் அந்த மாட்டுக்கு



இரு வாழைப்பழங்கள் கொடுப்பேன்



அவளிடம் கேட்டுக்கொண்டு!



நன்றி: ஆனந்த விகடன்

நாள் : 27-Oct-15, 5:12 pm

மேலே